என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Wednesday, August 7, 2013

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்...!


இறைவன் மிகப் பெரியவன்!

நம்மை படைத்தான்
பின் நமக்காக உலகை வடிவமைத்தான்;

உயிர் கொடுத்தான்
அதற்கு உடல் கொடுத்தான்
பின் உணர்வையும் கொடுத்து
நம்மை மனிதன் ஆக்கினான்;

தனிமையில் நாம் தவிக்காதிருக்க
சொந்தங்கள் கொடுத்து
பலம் ஊட்டினான்;

மிருகமாய் நாம் வாழாதிருக்க
அறிவை கொடுத்து மெருகூற்றினான்;

இத்துனையும் இதற்குமேலும்
நாம் கேட்டும் கேட்கமாலும்
கொடுக்கும் அவன்
நமக்கு கொடுத்த
கட்டாய கடமைகளிலொன்று
நோன்பு;

நோன்பென்பது
உணவின் அருமைத்தெரிய பசித்திருந்தும்
இச்சைகளிலிருந்து விலகி தனித்திருந்தும்
இறைவனை தொழுவதற்கு விழித்திருந்தும்
நற்பண்புகள் கற்றுத் தரும் செயல்;

முப்பது நாட்களில் மட்டும்
மனதில் அடக்கமாய்
குணத்தில் அமைதியாய்
வாழும் நாம்
வருடம் முழுவதும்
அப்படி வாழ முயற்சித்தால்
உலகெங்கும் அதர்மங்கள் குறையுமல்லவா?

இதோ!
இவ்வருடத்தின்
புனித மாதம் முடிந்தது;
நாளை நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
நம் மனதில் எங்கும் உற்சாகம்;

நாளை முடிந்து போய்விடில்
தேவையன்றி தேவையில்லை
தேவன் நமக்கு!

இனி வரும் காலங்கள்
நம் மனதின் போக்கை
மாற்றட்டும்;

இறைக்கு நன்றி சொல்லவும்
அவனை தொழுது நன்மை பெறவும்
நம் மனம் நாடட்டும்;

அவனும் அவன் நபியும்
சொன்ன வழியில்
நம் வாழ்க்கை மாறட்டும்;

அவனருள் பெற்று
நமக்கு மறுமையில்
சுவர்க்கம் சொந்தமாகட்டும் என
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
என்னுடைய ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்களை
உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

- நட்புடன்......கவித்தோழன்(ஷேக் இப்ராஹிம்)