என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Wednesday, June 24, 2009

பருவம் !!!


மற்றவர் செய்வதை திருப்பிச் செய்து
சுற்றமும் மகிழ்ந்திட
நானும் மகிழ்ந்திட்டேன்
மனதிலும் செயலிலும்
இறைவனை காட்டிடும்
குழந்தையாய்;


எதிர்கால எழுச்சிக்காக
நிகழ்கால வீழ்ச்சிகளை
மனதிலே தாங்கினேன்
துணிவுடனே இளைஞனாய்;




உழைப்பாலே தேடினேன்
விடியல் பல கோடியை
விடிந்து விட்டும் தேடினேன்
சராசரி மனிதனாய்;


- ஷேக் இப்ராஹிம்

Tuesday, June 16, 2009

குறுங்கவிதைகள்!!


என் உடலில்
எனக்குத் தெரியாமல்
இருவர்
ஒன்று என்னுயிர்
மற்றொன்று அதற்குள்
நீ!




அலைபேசி அழைப்பாய்
மின்னஞ்சல் அரட்டையாய்
தினம் என்னை
சந்திக்கும் நீ
எப்போது காட்டப் போகிறாய்
உன் 'முக'வரி!



உன்னை மாற்றிவிட நானும்
என்னை மாற்றிவிட நீயும்
செய்யும் செயல்களிலாவது
ஒற்றுமையாய் மகிழ்வுறட்டும்
நம் நினைவுகள்!!


Saturday, June 13, 2009

கவித்தோழனின் குறுங்கவிதைகள்!!




மறந்துவிட்ட பக்கங்களை
மறுமுறை தேடுகிறேன்
நாளை எனக்கு
தேர்வு நாளாம்!!



நான் தினம்
நிறம் மாறினாலும்
இவன் நிறம் மாறவில்லை
சலிப்புடன்,
உடை!!



செய்வது தெரியாது
சொல்வது புரியாது
தூக்கமுமில்லை
மரணிக்கவுமில்லை
போதையுடன்

மயக்கம்!!



அனுதினமும் யாருக்கும்
தெரியாமல் நடக்கும்
ஓர் தேடல்
விடியல் இரவையும்
இரவு விடியலையும் !!



எதையும் தடுத்து
நிறுத்த முடியவில்லை
சொற்றொடரை நிறுத்தியது
முற்றுப்புள்ளி!!

Thursday, June 11, 2009

குறுங்கவிதைகள்!!


மறந்து
மறைந்து
மறையாதது
ஆசை!




முகம் முழுவதாய்
நனைத்தப் போதிலும்
தலை நனைக்காத மழை
கண்ணீர்!



பிரிந்து செல்லும்
திசை அறியாததால்
கூடி நின்று அழுதன
மழையாய் மேகங்கள்!




இறுதியில் போய்
முடியும் இடம்
தெரியாமல் இருக்கின்றன
எல்லோர்க்கும் வழிகாட்டும்
பாதைகள்!







அனைவரும்
கூச்சல் போடும் நேரத்திலும்
அமைதியாய் இருந்தது
மின்சார வெட்டில் மாட்டிக்கொண்ட
ஒலிப்பெருக்கி!