என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்து கவிதை...!

முன்னேற்றங்களும் பின்னேற்றங்களும்
வாழ்வின் அடிப்படை தத்துவம்;

நாம் கடந்து வந்த
வாழ்க்கை புத்தகத்தில்,
வருடங்கள் மாதங்கள்
வாரங்கள் நாட்கள்
நிமிடங்கள் நொடிகளென
அனைத்து பக்கங்களை
புரட்டிப் பார்த்தால்,
நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்
புத்தாண்டு என்பது
வருங்கால தேதிகளை மாற்றிவிடும்
ஒரு நாள்தான் என்று ;

கடந்து வந்த பாதைகள்
கடக்கவிருக்கும் பாதைகளில்
நமக்கு சந்திக்க போகும்
அனுபவங்கள் யாருக்கும் தெரியாது;

திசை திரும்பிவிட்ட
படகுமேலேரி பயணிக்கும் நம்மை
இந்த புத்தாண்டு
நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;

மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்
நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி
நம் வாழ்வில் இன்பமும் அமைதியும்
என்றும் நிலைத்துவிட
இறைவனிடம் பிரார்த்தித்து
என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்

-நட்புடன் கவித்தோழன்



Thursday, November 4, 2010

தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!!!






புத்தாடை அணிந்து
புது உற்சாகம் பிறந்து
இனிமையாய் பிறக்கட்டும் இத்தீபாவளி!

தாய் தந்தை ஆசிர்வாதத்தோடு
உடன் பிறந்தோரின் அன்போடு
தோழர்களின் உள்ளத்து வாழ்த்தோடு
செம்மையாய் சிறக்கட்டும் இத்தீபாவளி!

பலகார உணவின் சுவையோடு
பட்டாசு வெடியின் சத்தத்தோடு
வீட்டை சுற்றி அகல்விளக்கோடு
மேன்மையாய் இருக்கட்டும் இத்தீபாவளி!

அநியாய அசுரன் அழிந்த தினத்தில்
நாமும் நமக்குள் வாழும்
அசுர குணங்களை அழிக்கலாமே!

வெடிச்சத்தம் கேட்க தீபாவளி இருக்க
அமைதி ஏன் முகவரி இழக்கிறது
மற்ற நாட்களில்?

உலகை பற்றி
அறிந்து அறியாமல் இருக்கிறோமா?
இல்லை
அறியாமல் இருப்பதை அறிந்துவிட்டோமா?

தீண்டாமையை ஒற்றுமை எனும் தீ
கொளுத்தப்போவது எப்போது?

வன்முறையை மனிதநேயம் வெல்ல
எவ்விடத்தில் அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது?

தீவிரவாதத்தை அன்பு
மிஞ்ச முடியாமற் போனதற் காரணம்?

அத்துணைக்கும் பதில் நம்மிடத்தே உண்டு!

நொடிகளும் நொடிக்கொருமுறை
கடந்து விடுவதால்
இறந்த காலம் இறந்து போகட்டும்!

இன்றைய புத்தாடையுடன்
புதுமனிதனாய் நாம் பிறந்திட
இனி வரும் காலங்களில்
நற்சிந்தனைகள் நம் மனதில் வளரட்டும்;

முயற்சியை துணையாய் கொள்வோம்
அன்பினால் உலகை இணைப்போம்
விதியின் சதியை மதியால் வெல்வோம்
மனிதனாய் சிலநாள் உலகினில் வாழ்வோம்;

எத்திசையில் வாழும் அனைவரும்
அவரின் எண்ணத்துடன் இன்பமாய் வாழ்ந்திட
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கும்
இந்த கவித்தோழனின்
தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

- கவித்தோழன்

Saturday, October 16, 2010

பெண்களால்...தான்...உலகம்...!

முன்னூறு நாட்கள்
கருவறையில் எனை சுமந்து
அன்பின் மழை பொழிந்து
உயிர் கொடுப்பாள்
ஒரு தாயாக!


குறும்புத்தனமாய் சண்டைபோட்டு
விளையாட்டாய் போட்டிப்போட்டு
என்னை யவரிடமும்
விட்டுகொடுக்காத ஒரு தங்கையாக!


என் பெயரை
பிரபலப்படுத்தும் முதல் வானொலி!
என் இன்பதுன்பதிற்கு
துணை நிற்கும் தோழியாக!

கனவிலும்
கற்பனையிலும்
என்னுடன் வாழும்
காதலியாக!

என்னுடன்
தன் வாழ்வை ஒப்படைத்து
என்னை உயிராய் நினைக்கும்
மற்றொரு உயிரில் மனைவியாக!

தோற்றத்தில்
அன்னையின் உவமையாய் தெரிந்து
என்னை மனதில் ஹீரோவாக பாவிக்கும்
முதல் உறவில் மகளாக!

- இது என் வாழ்க்கைப்பயணத்தில் நான் சந்தித்த பெண்களை பற்றியது.

-நட்புடன்........கவித்தோழன்

Friday, March 5, 2010

நீ. நான்.. நிலா...!!!

அலை ஒதுங்க கரை
நான் ஒதுங்க நீ!

நீ எங்கே
மறைந்து விட்டாய்?
ஏன் என்னை மறந்து விட்டாய்?

உயிரற்று மரணித்து இருக்கிறேன்
உயிர் தர வா
என் உயிரே!

இதயம் இயங்க மறுக்கிறது
உன் மூச்சு காற்று
என் மீது படாமல் இருப்பதால்;

பார்ப்பது எல்லாம்
உன்னை போல் இருக்கிறது
நீ மட்டும் விலகி நிற்கிறாய்;

கேட்பது எல்லாம்
உன் குரலாய் உணர்கிறேன்
நீ மௌனமாய் இருக்கிறாய்;

என் வானில் நீயற்று
இருள் சூழ்ந்துள்ளது
ஒளி கொடுக்க
வா என் நிலவே!
- கவித்தோழன்