என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, December 8, 2011

ஒஸ்தி - தி குஸ்தி விமர்சனம்




டபாங் படத்தை ஹிந்தியில் பார்த்தவர்கள் முதல் இரண்டு பத்தியை படிக்கதேவை இல்லை.

கதை : ஒரே தந்தைக்கு பிறந்த இரண்டு தாய் மகன்களின் முறைப்புபோராட்டமும் பாச போராட்டமும் தான் கதை.

நாசரின் மனைவி ரேவதி தனது கணவர்(வேறு ஒருவர்) இறந்த உடன்சிம்புவுடன்,நாசரிடம் தஞ்சம் அடைகிறாள்.அவருக்கு பிறக்கும் மகன் ஜித்தன் ரமேஷ் இருவரும் சிறு வயதில்முட்டிக்கொள்வதும்
மோதி கொள்வதும் பின் அதே தொடர்கதையாகி பெரியவராகும்போது சிம்புலோக்கல் இன்ஸ்பெக்டர்,ரமேஷ் தனது தந்தையுடன் மில்லில் உதவியாக இருக்கிறார்.

அங்கே தேர்தலில் நிக்க போகும் வேட்பாளர் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய தனது ஆட்களிடம் பணத்தை கொடுத்தனுப்ப அதை லபக்குகிறார் சிம்பு.பணத்தைசிம்புவிடம் இருந்து திரும்ப பெற முயற்சிக்கும் வில்லனிடம் தன் புத்திசாலித்தனத்தால் தப்பிக்கிறார்.

பணம் கொடுக்காமல் இருப்பதை அறியும் மாவட்ட செயலாளர் விஜயகுமார்வில்லனை கண்டிக்க,அவர் சிம்புவின் தாயாரை கொள்கிறார்,மில்லை எரிக்கிறார்.நாசர் அதிர்ச்சியில்படுக்கைக்கு செல்ல
திணறும் ரமேஷை தன் வசமாக்கி தன் காரியங்களை சாதிக்கிறார்,விஜயகுமாரையும் கொல்கிறார்.

பின் சிம்புவை கொல்ல ரமேஷிடம் துப்பாக்கி கொடுத்து அனுப்ப அங்கே ரமேஷ் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் சரண்டர் ஆக அவர்கள் இருவரும் எப்படி தங்கள் எதிரியை வென்றார்கள் என்பது தான் ஒஸ்தியின் கதை சுருக்கம்.

சிவாஜி தி பாஸ்,ஒஸ்தி தி மாஸ் என்று வசனம் பேசி தான் படத்தையேஆரம்பிக்கிறார்கள்.டபாங் ரீமேக் இல்லை இது டபாங்கின் தமிழ் டப் தான் இது.

படம் பார்த்துக்கொண்டே சில பேர் திட்டி கொண்டே இருந்தார்கள்...

காரணம்

முதல் : படம் மதியம் தான் வெளியானது காலையில் சென்ற விசில் குஞ்சுகள் எல்லாம் காத்திருக்க வேண்டியதாய் போயிற்று.

இரண்டாம் : அவ்ளோ நேரம் வெயிட் பண்ணி பார்க்கும் போது இருந்த எதிர்பார்ப்பு ,படத்தில் இல்லை என்பது தான்.

சிம்பு,படத்தின் மொத்த பலமே இவர் தான்.அந்த ஸ்டைல் போலீஸ் கெட் அப் இவருக்கு நன்றாக பொருந்திருக்கு.சண்டை காட்சியில் மறுபடியும் பறக்க ஆரம்பிச்சிட்டார்.நடனம் நல்லா ஆடுவார்னு எல்லார்க்கும் தெரிஞ்சது தான்.கொஞ்சம் ஓவராக ஸ்டைல்
பண்ணுவதை தவிர்த்திருக்கலாம்.தன்னை காவல்துறை என்று சொல்லிபேசுவது,கண்ணாடி மாட்டிக்கொண்டு அழுவது...நல்ல ஐடியா பாஸ்...!

ரிச்சா,தொப்புளுக்கு கீழ தான் உடை உடுத்தனும்னு சொல்லி தான் தரணிஅழைச்சிருப்பார் போல.மயக்கம் என்ன வை விட இதில் அதிகமாக அழகாக இருக்கிறார்.மற்றப்படி கதையில் பாட்டு வர சேர்க்கப்பட்ட உப்பு தான் இவர்.

ரமேஷ்,இந்த படத்தில் நடித்ததற்கு ஒரு கிளாப்ஸ்.வெகுளியாக இருப்பதும் தன்காதலிக்காக திருடுவதும் தாயிடம் மாட்டி உருகுவதும்,சிம்புவிடம் முட்டி கொள்வதிலும் பின் பாசம்காட்டுவதிலும்
இவர் தான் இந்த படத்தின் மற்றொரு பலம்.

நாசர்,ரேவதி,சரண்யா மோகன் எல்லாரும் தனக்கு கொடுக்கப்பட்டதை செய்துள்ளார்கள்.

சந்தானம்,மயில்சாமி,தம்பி ராமையா எல்லாரும் நகைச்சுவை பண்றங்கனு கடிகடினு கடிக்கிறாங்க. சந்தானம் இன்னும் தன் ஸ்டைலை மாற்ற முயற்சிக்கவேஇல்லை,எல்லாரையும் ஓட்டி தள்ளுகிறார்.
ரிச்சாவை சிரிக்க வைக்க கணேஷ் பாடும் சென்பகமே பாடலில் அனைவரும்சிரிக்கலாம்.

இசை - தமன்..பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்தாலும் பார்க்க இன்னும்ரசிக்கவே முடிகிறது. பிண்ணனி இசையை ஹிந்தி தபாங் பார்த்து போட்டுருக்கலாம் இன்னும்கொஞ்சம் எதிர்பார்த்தேன் தமன்.

கோபிநாத் காமிராவும்,வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் நம்மை படத்துடன் ஒன்றவைக்கிறது.

வசனங்கள் சில நம்மை மிகவும் ஈர்க்கின்றன..

அவைகள் சில

போதை போட்ற அப்பாவுக்கு பிறந்த போதை ஏத்துற பொண்ணு.

கண்ணாடி மாறிடா நான் , நீ எத செஞ்சாலும் திருப்பி செய்வேன்டா...

எவ்ளோ நாள் தான் கெட்டவனா நடிக்கிறது,மங்காத்தா விளயாடுறேன்(அஜித்ரசிகருள்ள)

உனக்கு என்ன வேணும்,அனகோண்டா முட்டை அரை டசன் கொடுடா...

குவார்ட்டர கருமாந்திரம் சொல்லாத தமிழ்நாடே கொந்தளிக்கும்
(உபயம் : விடிவிகணேஷ்)

கலெக்டர்னா தளபதி அரவிந்த்சாமினு நினச்சேன்....

கவர்மென்ட் ஆபிஸில் பணம் இருக்குறது ஜெட்டி போடாம புல் பாட்டிலைரெண்டு காலுக்கு நடுவில் வைப்பதற்கு
சமம்.

நான் ஒரு வோட்டு குத்துனா பத்தாயிரம் வோட்டு குத்துன மாதிரி...

அரைக்கு பயப்பட மாட்டேன் அன்புக்கு தான் பயப்படுவேன்.

கலவரத்துல நெருப்புக்கு அரசு வண்டி சாதா வண்டினு எதுவும் தெரியாது.

முதுகுக்கு பின்னாடி குத்துறவன் தான் அதிகம் அதான் முதுகில் கண்ணாடி,அதுஎன் மூணாவது கண்.

திரைக்கதை,இயக்கம் - தரணி.டபாங்கினை டப் செய்து கொடுத்திருக்கிறார்.படத்தின் கதை மட்டும் வைத்துக்கொண்டு புதுசா ஏதும் சொல்லுறேன்னு சொதப்பாம கொடுத்திருக்கிறார்.திரைக்கதையில்
சிறு தடுமாற்றம் இருப்பதை தவிர்த்திருந்தால் ஒஸ்தி யான வெற்றி பெற்றிருக்கலாம்.

ஒஸ்தி - ஹிந்தி டபாங்கினை பார்க்காதவர்கள் பார்த்தால் ரசிக்கும் தமிழ் டபாங்.

Thursday, December 1, 2011

போராளி - சசிகுமார்,சமுத்திரகனியின் மற்றும் ஒரு வெற்றிப்பயணம்...!

போராளி - சசிகுமார்,சமுத்திரகனியின் மற்றும் ஒரு வெற்றிப்பயணம்...!


கதை
குமரனும் அவனது நண்பரும்(நரேஷ்) சென்னை அவனது நண்பனை தேடி வருகிறார்கள்.அவர்களுக்கு அங்கு ஒரு வேலை கிடைக்கிறது.அந்த வேலை போக மீதி நேரத்தில் ஏதாவது பகுதி வேலை செய்யலாம் என்று குமரன் யோசனை சொல்ல அங்குள்ள நால்வரும் சேர்ந்து "அவசர உதவிக்கு அணுகவும்,குறைந்த கட்டணம்"என்று விளம்பரம் செய்கிறார்கள்.அவர்களின் முயற்சி வெற்றி பெறவே அவர்கள் வேலை செய்யும் பெட்ரோல் பங்கில் இடம் கொடுத்து உற்சாகபடுத்துகிறார் அவர்களின் முதலாளி.அவசர புத்தியில் நரேஷும் கஞ்சா கருப்பும் போட்டோவுடன் விளம்பரம் கொடுக்க
குமரனை தேடி ஓர் கூட்டம் அங்கு வருகிறது அவர்கள் இவர்களை துரத்த,
இவர்கள் தப்பித்து விட.அது வரை நல்லவர்கள் என் பெயர் எடுத்த காலனியில் அந்த நண்பர்களை பைத்தியம் என்று வந்தவர்கள் அங்கே இருப்பவர்களிடம சொல்ல...அதோடு நிற்கிறது முதல் பாதி..!

இரண்டாம் பாதி...

குமரன்,ஓர் பெண்ணாசை பிடித்த தந்தையுடன் வாழும் தாயில்லா மகன்.அவன் தான் படிக்கும் பள்ளியில் அதிபுத்திசாளிதனமாய் இருக்கும் ஒரு மாணவன்.
அவன் கேட்கும் கேள்விக்கு வாத்தியாருக்கே பதில் தெரியாமல் குழம்பி அவனை வகுப்பை விட்டு விலக்கி வைக்கிறார்கள்.அவன் குடும்பத்திற்கு இது தெரிந்து போகவே அவனை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து வளர்க்கிறார் அவனது சித்தி (சித்தப்பாவின் மனைவி)அவளுக்கு இந்த சொத்தின் மீது ஆசை வரவே அவளது கணவனை தூண்டி விடுகிறார்.இங்கே அவனது தாத்தா
கொஞ்சும் பொறுக்கும் படி சொல்ல காலம் நகர்கிறது.

அதன் பின் அவன் தாத்தா இறந்து போகிறார்.குமரனின் தாத்தாவிற்கு சொந்தமான
நிலத்தில் யுரேனியம் இருப்பதை கண்டுபிடித்த ஒருவன் இவர்களிடம் அந்த நிலத்தை விலைக்கு கேட்க குமரனின் சித்தி அந்த இடத்தை விற்க முயற்சிகள் எடுக்க அவன் தாத்தா இந்த நிலத்தின் விற்கும் உரிமைகளை குமரன் மீது எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார் என்று எல்லோர்க்கும்
தெரிய வர,குமரன் வீட்டில் முன்பு வேலை பார்த்த ஒருவர் அவன் தாய் கொல்லப்பட்டதும் அவன் தாத்தா கொல்லப்பட்டதும் அவனிடம் சொல்லி உசுப்பி விட அவன் அவர்களை துவம்சம் செய்ய திரும்ப வந்து அவர்களிடம் மாட்டி கொள்ள அவர்கள் அவனை அடித்து துவைத்து இடத்தை
விற்க முயலும் போது பைத்தியம் போல் நடித்து குழப்பி விடுகிறான் குமரன்.அவனை மன நல காப்பகத்தில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.அவன் எங்கும் தப்பிக்காமல் இருக்க அவன் வீட்டில் இருந்தும் ஒருவன் அவனுடனே சேர்க்க படுகிறான்.குமரன் இருக்கும் காப்பகத்தில் நரேஷ் என்பவரும் இருக்கிறார் அவரின் பாதிப்பை கேட்டறிந்து கொள்ளும்
குமரன்.அவனை இழுத்து கொண்டு சென்னை போக (மேலே சொல்லப்பட்ட முதல் பாதி நடக்கிறது).

அங்கே தேடி வரும் தன் சொந்தங்கள் துரத்த...எதுவரை நாம் இனி ஓட முடியும்,
எதிர்த்து நின்று எல்லாரையும் அடித்து துவம்சம் செய்துவிடும போராளியின் கதை தான்
சசிகுமார்,சமுத்திரக்கனியின் இந்த 'போராளி'.

மனிதன் ஒரு சமுதாய மிருகம் - அரிஸ்டாட்டில் என்று படம் தொடங்கியது
அக்மார்க் சமுத்திரகனி ஸ்டைல்..!தீமைக்கும் நன்மை செய்,பெட்ரோல் விலையேற்றத்துடன் காட்டிய கால நகர்வு..இது போன்ற
பல குட்டி கவிதைகள் படத்தில்.

சென்னையில் ஒரு காலனி வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை
படவா கோபி அவர் மனைவி சாந்தியின் சண்டை,ஹவுஸ் ஓனர் கு.ஞானசம்பந்தன்,
அவசரத்தில் உதவி செய்யும் குடிகாரன் மூலமாக கண் முன் காட்டிருக்கிறார்.

படத்தின் மிக பெரிய ப்ளஸ் வேகமான திரைக்கதை.ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு என கியர் போட்டு
ஓடுகிறது திரைக்கதை..இரண்டாம் பாதியில் கொஞ்சம் வேகம் குறைத்து பின் அதிவேகம் கூட்டியதில் அப்ளாஸ் அள்ளுகிறார் சமுத்திரகனி.

படத்தின் வாசங்கள் தான் ஹை அப்ளாஸ் அள்ளுகிறது.
'முன்னாடி பின்னாடி தெரியாதவன் கூட நம்பலாம் ஆனா சொந்தக்காரன நம்பக்கூடாது.'
'உடம்புக்கு வர பிரச்னை கிட்ட வச்சிக்கிற நாம மனசுக்கு வர பிரச்சனைனா ஒதுக்கி வச்சிட்றோம்'
'எடுக்குற முடிவை முத ராத்திரிலேயே எடுங்கடா அப்புறமா சண்டை போட்டு யாரயும் கொல்லாதிங்க'
'இந்த காம்பவுன்ட்ல அவுங்கதான் நார்மல்'
'யாரையும் அடிமைபடுத்தவும் விரும்பல,அடிமையா இருக்கவும் விரும்பல'
'நீ தோத்தவன பாக்குற,நான் ஜெயச்சவன பாக்குறேன்'
'எப்பயோ கிடைக்குற பால்கோவாவ விட இப்போ கிடைக்குற மிட்டாய் தின்னா வாயாச்சும் இனிக்கும் டா' போன்றவை சில எடுத்துக்காட்டு.

காமிரா,கதை ஏற்ற சூழ்நிலையில் பயணிக்கிறது.

இசை,நாடோடிகள் படத்தில் கிடைத்த சம்போ சிவ சம்போ இல்லாத குறை தான்.
மற்றபடி பின்னணி இசையில் அப்படியே நாடோடிகள் சாயல் கொஞ்சம்.இரண்டாம் பாதியில் பாட்டு வைக்காமல் போனது,கதையை குழப்பாமல் நம்மிடம் சேர்க்கிறது.

சசிகுமார்,படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர்.ஹீரோவா இந்த படத்தில்
நன்றாகவே நடித்திருக்கிறார்.முடி வளர்த்து மிரட்டும் இடத்திலும்,வீரமாக எதிர்த்து நின்று ஆட்டிடம் முட்டு வாங்கும் போதும்,சென்னையில் தான் வாழுமிடம் சுற்றி நல்ல பெயர் வாங்கும் போதும்,சுவாதியிடம் "உனக்கு யாருமில்ல,எனக்கு எல்லாரும் இருந்தும் யாருமில்ல"என்று சொல்லி அழுமிடத்தில் கிளாப்ஸ் சசி..!

நரேஷ்,படத்தின் இரண்டாம் ஹீரோ என்றே சொல்லலாம்.வேலை செய்ய வந்த இடத்தில் கரெக்ட் பண்ணும பெண்ணிடம் சென்னை பாஷையில் திட்டு வாங்கும்போதும்,சம்பந்தப்பட்டவன் நான் தானடா என்று புலம்பும் போதும்,வியாதியால் துடிக்கும்போதும் இவரின் நடிப்பு பயங்கரம்.

சுவாதி தனக்கு கொடுக்க பட்டதை சரியாய் செய்திருக்கிறார்.சசிகுமார்,'நீ வேணும்னு வந்துட்ட,இனிமே நீயே வேணாம்னு சொன்னாலும் என்ன விட்டு போக முடியாதுனு' சொல்லுமிடத்தில் சுவாதியின் நடிப்பு ஒரு தனி அழகாய் தெரிந்தது.

போராளியை பார்ப்பவர்கள் கண்டிப்பாக மறக்க முடியாத சிறிய கதாப்பாத்திரம்
வசுந்தராவுக்கு சொந்தம்.இவரின் வீராமான நடிப்பு கண்டிப்பாக ரசிக்க முடிந்தது.

சூரி,இவரை காமிக்கும்போது பரோட்டானு கத்தினார்கள் சில இளசுகள்.படத்தில் நகைச்சுவை பாத்திரம் கஞ்சா கருப்பை விட இவருக்கு தான் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது.'நாங்க அப்போவே அந்த மாறி இப்போ சொல்லவா வேணும்'னு சொல்லுமிடமெல்லாம் செம சிரிப்ப்பு.

கஞ்சா கருப்பு..நாடோடிகள் போல அதே கதாபாத்திரம் தான்.இவர் புலி வேஷம்
போட்டு ஆடும்போது புலி உருமுது பாட்டை போட்டது செம காமெடி.கரடி வேஷம் போட்டு கொண்டு போலீசில் மாட்டிக்கொண்டு இவர் வாங்கும் அடி காமெடி இடி.

அதோடு விடாமல் கிளைமாக்ஸ்-இல் நரேஷை தேடி ஒரு தெலுங்கு கும்பல் வந்து நிற்க..இது யாருனே எனக்கு தெரியாது என்று இவர் சொல்ல,அந்த போட்டோ விளம்பரத்தை காண்பித்து படத்தின் எண்டு கார்டு போடுவது...செம ரகளை..!

மொத்தத்தில் வேகமான இன்னொரு திரைக்கதையுடன் நம்மை ரொம்பவே ஈர்க்கிறார் சமுத்திரகனி..!

போராளி - போராடி ஜெயித்த சசிகுமார்,சமுத்திரகனிக்கு வாழ்த்துக்கள்.

படம் முடிஞ்சு வெளிய வரும்போது ஒருத்தன் படம் போனதே தெரில மச்சான்னு சொன்னான் இது தான் 'போராளி' வெற்றியின் அறிகுறி..!

Friday, November 25, 2011

மயக்கம் என்ன..? மயக்கியதா...விமர்சனம்

மயக்கம் என்ன..? மயக்கியதா..திரை விமர்சனம்..!

ஒரு கனவு அதுவும் கற்பனை திறமை கனவு அதுக்காக பெரிய போராட்டம்,அந்த கனவின் கற்பனை திருடப்பட்டு அது வேறு ஒருவருக்கு ஏணியாக மாறினாலும் அந்த கனவை விடாமுயற்சியுடன் அடையும் ஒரு போட்டோகிராபரின் கதை தான் இந்த..மயக்கம் என்ன..?

அந்த கனவை அடைய அவருக்கு தேவைப்பட்டது விட்டு கொடுக்காத நாலு நண்பர்கள் மற்றும் ஒர் அழகிய ராட்சசி மனைவி.

படத்தின் கதை :

கார்த்திக்(தனுஷ்),சுந்தர் இருவரும் நண்பர்கள் அவர்களின் நட்பு வட்டத்தின் வந்து சேருகிறாள் யாமினி (ரிச்சா).யாமினியை எப்படியோ கரெக்ட் பண்ணிவிடுகிறார் சுந்தர்.ஆங்கிலத்தில் அதிகமாக பேசுவதால்
அவளுக்கும் கார்த்திக்கும் அடிக்கடி முட்டி கொள்கிறது.சுந்தர் மீதிருந்த தன பார்வையை கார்த்திக் பக்கம் திருப்புகிறார் யாமினி இதை புரிந்துகொண்ட கார்திக்,தன நண்பனுக்கு துரோகம் செய்வதாக எண்ணி
யாமிணியிடம் இருந்து விலகிபோகிறார்.ஒரு நாள் இருவர் மனதும் காதல் வயப்பட சொல்லி கொள்ளாமல் மைசூர் போகிறார் கார்த்திக்.அங்கிருந்து திரும்பி வரும்போது தன் நண்பனிடம் திட்டு வாங்கிவிட்டு வாஸ் ரூம் போகிறார் அவரை பின் தொடர்கிறார் யாமினி,அங்கே அவர்கள் காதலால் தழுவிக்கொள்ள
திடீரென அங்கு வரும் சுந்தருக்கு இவர்களின் காதல் வெளிச்சம் ஆகிறது.

அப்போது நண்பர்கள் இருவரும் பிரிய,சுந்தரின் அப்பா இருவருக்கும் தண்ணியை(டாஸ்மாக்)கொடுத்து அழுவவிட்டு சேர்த்து வைக்கிறார்.அப்போது கார்த்திக் யாமிநியிடம் இருந்து விலகி நண்பருடன் வீடியோ
கேம் விளையாடுகிறார்.அங்கு யாமினி வந்து கண்டிப்பாக கார்த்திக்கை சந்திக்க முயல,சுந்தரின் அப்பா கார்த்திக்கும் யாமிநிக்கும் மனம் முடித்து வைக்கிறார்.அங்கிருந்து தேனிலவு போன சமயம்,தான் வாய்ப்பு கேட்டு சென்ற போட்டோகிராபரிடம் கொடுத்த போட்டோவை அவர் தன் திறமையின்
விளம்பரத்திற்கு உபயோகித்து கொண்டார் என்று தெரிய வரும்போது மூணு மாடியில் இருந்து அப்டியே சரிந்து விழுகிறார்.

இப்போது கதை இரண்டு வருடம் கழித்து பயணிக்கிறது.முயற்சியின் விரக்தி கார்த்திக்கை ஒரு மன நலம் சரி இல்லாதவன் போல் மாற்றுகிறது.அப்போது அவள் மனைவி அவன் எடுத்த புகைப்படங்களை பிரபல பத்திரிக்கைகளுக்கு
அனுப்புகிறாள்.அதன் பின் அந்த ஏமாற்றிய திறமைசாலி டி.வி.யில் பேட்டி
கொடுக்க அதை போட்டு உடைக்கிறார் மனைவியை எட்டி உதைக்கிறார் அதில் யாமினிக்கு கர்ப்பம் கலைகிறது.

சிறிது நாள் கழித்து,யாமினி அனுப்பிய படங்களில் ஒரு யானை படம் ஒரு பிரபல பத்திரிக்கையில் அட்டை படமாக வர கார்த்திக்கின் திறமை உலகத்தின் வெளிச்சத்திற்கு வருகிறது.உலகின் மிகச் சிறந்த போட்டோகிராபராக கார்த்திக் தேர்ந்தேடுக்கப்படுகிறான்.அங்கே பேசும் கார்த்திக் தன் நண்பர்களுக்கு நன்றியை சொல்லி ஒன்றும் சொல்லாமல் சென்று திரும்பி தன் மனைவியை புகழ்ந்து பேசி அவளின் புகைப்படத்தை உலகிற்கு காமிக்கிறான்.அங்கிருந்து
யாமினிக்கு போன் போடும் கார்த்திக்கிடம் அவள் பேசாமல் மெளனமாக இருக்க,அப்போ சுந்தர் அவளிடம் பேச சொல்லி கெஞ்ச,அவள் போனை எடுத்து கொண்டு நகர...

எ பிலிம் பை செல்வராகவன்.

படத்தின் ஹைலைட்ஸ் :

கற்பனை கடவுள் கொடுக்கணும் தானா வராது என்று சொல்லி இன்னொருத்தரின் திறமையை திருடுவது.இந்த விஷயம் உலகில் அதிகமாக நடக்கும் ஒரு விஷயம்.

தன்னை லுக் விடும் யாமினியை பார்த்து,நீ எனக்கு சிஸ்டர் மாதிரின்னு கார்த்திக் சொல்வது.

உனக்கு திறமை இல்லை நீ வேற வேலை எதாச்சும் பாத்துக்கோ என்று சொல்லிய யாமிநியிடம் பிடிச்ச வேலை தான் செய்றேன்,நான் ஒரு பிச்சைகார போட்டோகிராபரா இருந்துட்டு போறேன் என கார்த்திக் சொல்வதும்.

அதற்கு முன்பு,ஒரு பாட்டியிடம் உன்ன படம் பிடிக்கட்ட என்று கேட்பதும்
பிடித்த படத்தை அவரிடம் காண்பிக்கும்போது அவர் அதை மறுப்பதும் பின்பு அவரே அவரின் கணவனிடம் சென்று என்ன எவ்ளோ அழகா படம் பிடிச்சிருக்கு என்பதும் அவர் அதை தனக்கு ஒரு காப்பி கேட்பதும்..செல்வராகவனின் மயக்கம் என்ன..ஹைக்கூ..!

யாமிநியிடம் உன் கணவன் ஒரு பைத்தியம் வீட்டை காலி பண்ணு என்று சொல்லும்போது யாமினி கொடுக்கும் பதிலும் அந்த நகைச்சுவையும் மிக அழகு.

குடிக்க கொடுத்து நண்பர்களை ஒன்று சேர்த்த விஷயம் பழசு தான் ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்கு.

கார்த்திக் ஒரு பைத்தியம்,நீ இன்னும் எவ்ளோ நாள் தான் கஷ்டப்படுவன்னு சொல்லும் கார்த்திக்கின் நண்பரிடம்,இது உன் தப்பில்ல என் தப்பு,நான் உங்கிட்ட அழுதுருக்க கூடாது.நீயும் ஒரு ஆம்பளை தானே என்று சொல்வதும்,நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணு உன் பொண்டாட்டிய நீ தான் தேடிக்கனும் அடுத்தவன்
பொண்டாட்டிய நீ தேட கூடாது,என் புருஷன் ஜீனியஸ் என யாமினி சொல்லுமிடம்...படத்தின் ஹை கிளாஸ் சீன்.

படத்தின் மைனஸ் :

வழக்கம் போல் செல்வாவின் இரண்டாம் பாதி எப்போதும் மெதுவாத்தான் நகரும் இதில் அது மாறாமல் கொடுத்திருக்கிறார்.

கர்ப்பம் கலையும் சீனின் நீளத்தை குறைத்திருக்கலாம் அவர்களின் நடிப்பு நன்றாக இருந்தாலும் பார்க்க பொறுமை இல்லை தலைவா..!

படத்தை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் அவரின் திறமையை உடனடியாக உலகிற்கு
பரப்பியது கொஞ்சமும் லாஜிக் இல்லை.

செல்வாவின் ஹீரோக்கள் அனைவரும் வெறி வந்தால் ஏன் கண்மூடித்தனமாக நடக்கிறார்கள்.

பெர்பார்மண்ஸ் :

தனுஷ் - தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்.ஆரம்பத்தில் ரிச்சாவிடம் மோதிகொள்வதும் பின் காதல் வயப்படுவதும்,நண்பனுக்காக விரட்டி அடிப்பதும் மீண்டும் அதே பெண்ணுடன்
மனம் முடிப்பதும்,தன் திறமையை நிரூபிக்க போராடும் நேரத்திலும் அதை திருடியவனிடம் போய் இது என்னோடது என கெஞ்சும் இடத்திலும் பின் அதனால் பாதிக்கப்பட்டு முயற்சியுடன் போராடும் போதும்
அப்ளாஸ் அள்ளுகிறார்.

ரிச்சா - படத்தின் பலமும் இவர் தான் பலவீனமும் இவர் தான்.பலம் - இவரின் நடிப்பு,பலவீனம் இவரின் சோக முகம் ( செல்வாவின் நாயகிகள் அப்டி தான் இருக்கணுமா என்ன..?)

சுந்தர் (இவர் பெயர் தெரியவில்லை) தனுஷின் நண்பனாக வரும் முதல் பாதியை தாங்கி பிடிக்கிறார்.என்னோட கேர்ள் பிரெண்ட மடக்கி கல்யாணம் பண்ணிகிடான் என புலம்புவதும் தனுஷை பார்க்கும்போது சிரிப்பதும்,
இறுதியில் அவர் மனைவி இது சுந்தர் வாங்கிய விருது என காமிக்கும்போது அவர் ரியாக்சன் சூப்பர். நாயகன் நண்பராக ஒரு ரவுண்டு வருவீங்க சுந்தர்.

படத்தின் அடுத்த ஹீரோ,வேற என்ன ஒளிப்பதிவு தான்.கதையில் புகைப்படம் வேறு கலந்திருப்பதால் இவருக்கு அதிக வேலை.அதை ராம்ஜியின் காமிரா சுற்றி சுழலடித்திருக்கிறது.நாமே இனிமே எதாச்சும் நல்ல படம் கிடைத்தால் உடனே நமது காமிரா எடுத்து படம் பிடிக்கும் ஆர்வத்தை கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி ராம்ஜி சார்.

படத்தின் இசை பற்றி எல்லோருக்கும் சொல்லவேண்டியதில்லை ஆனால் அதை எடுத்திருக்கும் விதம மிக அருமை ஓட ஓட முடியல பாட்டை அனிமேஷன் தனுஷுடன் ரசிக்க முடிந்தது,அட்ரா அவளை பாட்டை
திணிச்சிருந்தாலும் ரசிக்காம இருக்க முடியுமா?மற்ற பாடல்கள் கேட்கும்போது உள்ள ரசனை மட்டுமே.

படத்தின் வசனங்கள் கொஞ்சம் ஈர்த்தன.அவன் என்ன பெரிய கொம்பா,ஆமா ரொம்ப ரொம்ப பெரிய கொம்பு என்பதும்,உனக்கு ஆய்னா என்னனு தெர்யுமா?..என் புருஷன் லூசு இல்ல அவன் ஜீனியஸ்...சில எடுத்துகாட்டு..!

செல்வாவின் இயக்கத்திற்கு தான் நான் படம் பார்க்கவே போனேன்.ஒரு காதல்,ஒரு கனவு,அந்த கனவில் ஒரு சிதைவு அந்த சிதைவினால் ஏற்படும் பாதிப்பு அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வெல்லும் அந்த கனவு.இந்த கதையை மிக அழகாக ஒரு கவிதையாக சொல்ல இவரை தவிர யாரால் முடியும்.படத்தில் இரண்டாம் பாதியில் சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

மயக்கம் என்ன - மயக்கும் உங்களையும் கொஞ்சம் பொறுமையுடன் ரசித்தால்..!

Tuesday, October 25, 2011

ஏழாம் அறிவா - வேலாயுதமா .. ஸ்பெசல் ரிப்போர்ட்!

இந்த தீபாவளி திருவிழா போல் கொண்டாட படவில்லை காரணம் மழை...

எப்போவும் தீபாவளி அன்னைக்கு முன்னாடி நாள் இரவில் மழை பெய்து அடுத்த நாள் வெயில் ஓரளவிற்கு இருக்கும் ஆனால் இந்த முறை பெரும்பாலான இடங்களில் மழை கெடுத்துவிட்டது...!

டி.வி யில் எதாச்சும் பாக்கணும்னா வேட்டைக்காரன் - பாஸ் எ பாஸ்கரன் - அவன் இவன் ( இதுல முதல் இரண்டும் ஓரளவிற்கு தமிழ் நாட்டின் ரசிகர்களுக்கு
பார்வையில் விழுந்த படம் தான்) நல்ல ரிசல்ட் கிடைக்காததால் வீணாய் போன விஷாலின் உழைப்பு தான் அவன் - இவன். விஷால் ஒன்றை கண்ணுடன் நடத்திருக்கும் (நல்லா உழைத்திருக்கும்)படம் இது.மசாலா படம் மட்டும் நடித்து கொண்டிருக்க,அவரிடமும் இப்படி ஒரு நடிப்பு இருப்பதை கண்டுபிடித்த பாலாவுக்கு நன்றிகள்..!

சரி இப்போ நம்ம தலைப்புக்கு போகலாம்...

ஏழாம் அறிவு - பெரிய பட்ஜெட் படம்,பெரிய தயாரிப்பு. இயக்குனர் - ஹீரோ - இசை ஏற்கனவே இந்தியாவை கலக்கிய ''கஜினி'' ஹிட் கொடுத்தவர்கள்.

பெரிய எதிர்பார்ப்பு - அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை என ஏக பிக ஓவர் பில்ட் அப்.. தமிழ் , தமிழனின் உணர்வு என புதிதாய் கோர்க்கப்பட்ட பட விளம்பர வார்த்தைகள்.தமிழன் மார்தட்டி கொள்ளும் அளவிற்கு இந்த படம் இருக்கிறதா...சூர்யாவின் அயராத உழைப்புக்கு சரியான பதில் கிடைத்ததா...முருகதாசின் முயற்சிக்கு கிடைத்த விடை தான் என்ன..?

தயாரிப்பு - பெரிய பட்ஜெட் முதல் பாதியில் வீணடிக்க பட்டு இரண்டாம் பாதியில் காப்பாற்ற படுவதால் படத்தின் மீதான மோகம் சீக்கிரமே குறைந்து விடும்.

இயக்குனர் முதல் பாதியை இரண்டு முறை பார்த்து ரிலீஸ் பன்னிருக்கலாம். இரண்டாம் பாதியில் அவரின் திரைக்கதை அவரையும் அவரின் படத்தையும் தூக்கி நிறுத்துகிறது.இசை இன்னும் கொஞ்சம் உழைச்சிருக்கலாம்... படத்தின் எதிர்பார்ப்பு வீனடிக்கபடவில்லை என்றாலும் தலையில் தூக்கி வைத்து கொள்ளும் அளவிலும் இல்லை...

ஏழாம் அறிவு - இல்லாத அறிவை எதுக்கு கண்டுபிடிக்கிற அறிவு நமக்கு.இருக்குற ஆறறிவையே இன்னும் முழுசா யாரும் இன்னும் பயன்படுத்தல...இன்னும் யோசிங்க பாஸ்..!

அடுத்த படம் - காவலன் மூலம் தன் திரை வரலாறில் திரும்ப கியர் போட்டிருக்கும் 'இளைய தளபதி' விஜயின் தீபாவளி பட்டாசு..!

பால்கார விஜய், அன்பு தங்கை சரண்யா மோகன்,கிளாமர் காதலி ஹன்சிகா மற்றும் சுட்டி ஜர்னலிஸ்ட் ஜெனீலியா..!

வழக்கம் போல் நகரத்தில் நடக்கும் அநியாயம் அதை தட்டி கேட்கும் ஹீரோ அவதாரம்..இது தான் வேலாயுதம் கதை ஆனா படம் பின்னி பெடலேடுதிருக்கிறது.

தனது தம்பியை வைத்து மட்டும் படம் எடுக்கும் ஜெயம் ராஜா முதல் முறை ஒரு வெளி ஹீரோ அதுவும் ஒரு பெரிய ஹீரோ வை இயக்கி அதில் வென்றும் இருக்கிறார்.ஆரம்பத்தில் இருந்தே அவர் படத்தில் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்கும் அதை இந்த படத்திலும் கையாண்டு வென்று விட்டார்.

வசனம் எழுதிய சுபாவிற்கு ஒரு கைதட்டல் கொடுத்திடலாம்..!


விஜய் திரும்பவும் தான் ஒரு மாஸ் ஹீரோ தான் என் நிருபித்து இருக்கிறார். விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது தளபதி தீபாவளி தான்.

தியேட்டர் அதிகம் கிடைக்க பெறவில்லை என்றாலும் இந்த படம் வெறும் வெற்றி பெற்று விட்டதாக தகவல் தெரிகிறது.

வேலாயுதம் - வெற்றி பெரும் ஆயுதம்..!

இந்த தீபாவளி திரைப்பட தேர்தலில் ஜெயச்சது நம்ம அணில் விஜய் தான் அவரின் நண்பரான சூர்யா கொஞ்சம் சருக்கிவிட்டார் (அந்த படத்தின் ஓவர் பில்ட் அப் தான் இதற்கு காரணம்) ஓவர் பில்ட் அப் கொடுத்தா கூட்டம் வரும் ஆனா அதே கூட்டம் நாளைக்கு வர போற கூட்டத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் காரணமாக இருக்கும். ஓவர் பில்ட் அப் கொடுத்தாலும் அதில் ஜெயச்ச படம் ' மங்காத்தா' (ஒரே நேரத்தில் தலயும்,தளபதியும் ஜெய்க்கிறாங்க) ஓவர் பில்ட் அப் இல்லனாலும் அம்மா வின் ஆதரவு பெற்ற தால் (ஜெயா டிவில நிமிடத்துக்கு ஒரு முறை ட்ரைளர்) அணில் விஜய் ஜெயத்துவிட்டார்..!

ஏழாம் அறிவு
படம் நெட்டில் வந்துவிட்டதாக தகவல வந்துருக்கு, இவ்ளோ ஸ்பீடா எப்டிடா இருக்கீங்க உங்கள எல்லாம் திட்ட தமிழ் கேட்ட வார்த்தைகள் அனைத்தும் அடங்கிய புத்தகம் படிக்கணும் அத உங்களுக்கு பரிசளிக்கணும்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ஏழாம் அறிவு - உண்மையான திரை விமர்சனம்

1600 வருடத்திற்கு முன்பு போதிதர்மன் என்னும் இளவரசன் இருந்தான் (தற்காப்பு கலை மற்றும் மருத்துவத்தில் திறமைசாலி )அவன் காஞ்சிபுரத்தை சார்ந்தவன் சீனாக்கு செல்கிறான்.பிறகு சீனா கிராமத்தில் வித்தியாசமான நோய் தாக்குகிறது.பின்னர் சூர்யா அந்த நோயை குணப்படுத்தஉதவி புரிகிறார்.அந்த கிராமத்தினர் சூர்யாவை கடவுளாக பார்கின்றனர்.பின்னர் ஒரு குதிரை படையுடன் சிலர் அந்த கிராமத்தை தாக்குகின்றனர் அவர்களிடமிருந்தும் காப்பாற்றும் போதிதர்மன் தற்காப்பு கலையை அவர்களுக்கு கற்பித்து பின் தான் இந்தியா செல்வதாக கூறுகிறான்.அந்த கிராமத்து வாசிகள் அவனுக்கு விஷம் கொடுத்து சாகடிகின்றனர் (அவன் உடல் அவர்கள் பூமியில் புதைக்கபட்டால் அந்த கிராமத்திற்கு எந்த நோயும் வராது )
அவர்களின் எண்ணம் புரிந்த போதிதர்மன் அந்த விஷத்தை தெரிந்தே குடிக்கிறான்.
அங்கு தான் தற்காப்பு கலை மற்றும் மருத்துவம் சீனாவில் வளர்கிறது.

இத்தோடு போதிதர்மன் கதை க்ளோஸ்...

தற்போதைய கதையில் ஏற்கனவே சொன்ன மாறி சூர்யா ஒரு சர்கஸ்
நிபுணர்.அவர் ஸ்ருதி ஹாசன் மேல் காதல் கொள்கிறார்..ஸ்ருதி ஹாசன்
ஒரு விஞ்ஞானி(உண்மையா இப்படி ஒரு லவ் செட ஆகும்).ஸ்ருதி
ஹாசனும் காதல் கொள்கிறார் (வேற வழி இல்ல கத போகணும்ல )
கொஞ்ச நாள் சென்று சூர்யாவின் கிராமத்து ஆட்களின் மூலமாக சூர்யா,ஸ்ருதி தன்னை ஒரு வருடமாக பின் தொடர்வதை தெரிந்து கொள்கிறார்.

அப்புறமா ஏன் என்னும் காரணத்தை கேட்க ஸ்ருதி இடம் கேட்கிறார்
சூர்யா.அதற்கு ஸ்ருதி ,சூர்யா போதிதர்மன் பரம்பரையை சார்ந்தவர் எனவும்
அவரின் ஆராய்ச்சியில் போதிதர்மனின் சக்தியை இந்த சூர்யாவிற்கு கொண்டு வர முடியும்
என் சொல்கிறார்.

அதற்குள் வில்லன் டாங் ஒரு நாய்குள் எதையோ செலுத்துகிறார் அப்புறம் அவன்
கண்களின் சக்தியை கொண்டு அங்கிருக்கும் போலீசை துவம்சம் செய்கிறார்
அதன் சூர்யாவையும் ஸ்ருதியையும் துரத்துகிறார்.சூர்யாவும் ஸ்ருதியும்
அவன் சீனா அரசால் அனுப்பி வைக்கப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள்.

அவன் ஒரு நோயை நாய் மூலம் நம் நாட்டுக்கே பரவ விடுகிறான்.
அப்போது தான் இந்திய நாடு தவிக்கும் போது சீனாவால் மருந்து தயாரித்து
கொடுக்க முடியும் (விற்கவும் முடியும்) - இது எப்டினா (போதிதர்மன்
அவர்களுக்கு அதற்கான மருந்தை செய்வது எப்டி என கற்றுகொடுத்திருக்கிறான் அல்லவா..)
அதனால சூர்யாவையும் ஸ்ருதியையும் கொன்னுட்டா அந்த மருந்த சூர்யா
மூலமா ஸ்ருதி தயார் பண்ண முடியாது.

அப்புறம் ஸ்ருதி தன ஆராய்ச்சி மூலமாக சூர்யாவை போதிதர்மனாக மாற்ற
தயார் செய்கிறாள் அங்கே வரும் டாங் சூர்யாவை கிட்டத்தட்ட சாவும் நிலைக்கு
தள்ளினாலும் அந்த நேரத்தில் போதிதர்மன் ஆக்டிவேட் ஆகி
டாங்கை கொள்கிறான்....(ஏழாம் அறிவு முடிஞ்சு போச்சு பா இதோட)

சூர்யா - இவர் தான் இந்த படத்தின் தூண்.சர்கஸ் காட்சிகள் மிக குறைவாக
இருப்பதால் அங்கே அவ்வளவு விஷயம் இல்லை.ஆக்சன் தான்
பயங்கரமா பின்னிருக்கார் மனிதர்.அதுவும் கிளைமாக்ஸ் ல
செமையா தூள் கிளப்பிருக்கார் - ஒரு உண்மையான தற்காப்பு கலை நிபுணர்
போல.

ஸ்ருதி - இரண்டாம் ஹீரோ மாதிரி வேடம் இவருக்கு.அவர் அதை நன்றாக பயன்படுத்தியும்
இருக்கிறார்.நல்ல எதிர்காலம் இருக்கு ம உனக்கு...!

படத்துல மிக மிக முக்கியமான ஆள் வில்லன் தான் ... என்ன
ஒரு மிரட்டலான கண்ணு இவருக்கு.இவரு ஆக்சன் பாத்துட்டே
இருக்கலாம் போல இருக்கு..நல்ல தேர்வு.

படத்தை பற்றி கொஞ்சம் பார்ப்போம்:
முதல் பதினைந்து நிமிடம் - பதினைந்து கோடி ( ஒரு நிமிஷம் ஒரு கோடி (எங்கேயும் எப்போதும் படத்தோட பட்ஜெட்)
அது கண்டிப்பா நிறைவா பிரமாண்ட படுத்தி எடுத்துருக்காங்க..வாழ்த்துக்கள்..!
படத்தை பார்க்கும் அனைவரும் ரசிக்க முடியும் அந்த வரலாறு படைப்பை..!

அப்புறம் படம் ஆரம்பிக்கும் ...முதல் பாதி பார்க்காம படத்தை பார்த்தால்
மிக்க நலம்.ஏன் என்றால் அதில் நாலு பாட்டு அதுல மூணு தேவையே இல்லாம
முதல் பாட்டு சீனப்பாட்டு..அப்புறம் ரிங்க ரிங்கா..அப்புறம் டீ குடிக்கும்
காப்ல முன் அந்தி பாடல் ... அப்புறம் ஒரிரு நிமிடங்களில் எம்மா எம்மா?
முருகதாஸ் மாறி இயக்குனர்கள் இப்படி பாடல்களை தேவை இல்லாமல்
வைப்பது படத்தின் மேல் தானே வெறுப்பை கொண்டு வருகிறது.

படத்தின் இடைவெளியில் போது சிலர் இதுவரைக்கும் சரியில்ல இனிமேல் என்ன எடுத்துருக்க போறான்னு
பேசுனத என் காதில் கேட்க முடிந்தது...முதல் பாதி - வெறி சாரி முருகதாஸ்.

அப்புறம் ஆரம்பிச்ச இரண்டாம் பாதி தான் படத்தின் பக்க பலம்.
ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பு.அடுத்த நிமிடத்தை நோக்கி
நாம் செல்வதை உணரவைக்கும் வேகம்.வில்லன் ஹீரோ,ஹீரோயினை
துரத்துவது தவிர தசவதாரத்திற்கும் அதே கதையோடு
வந்திருக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் தான் மிகவும் என்னை இனி பார்க்க போகும்
உங்களையும் கவரும் ஒரு விஷயம்.இந்த படத்தில் நோக்குவர்மம்
கலை அதாவது ஒருவரின் மூளையை நம் பார்வையை கொண்டு
இயக்குவது.இது படத்தில் போதிதர்மனாலும் வில்லனாலும் அடிக்கடி
படத்தில் யூஸ் பண்றாங்க.

படத்துல நம்மை மாறி ஆட்கள் நம்பாத மாறி ஒரு சீன்.
ரோட்டில் வண்டியை ஓட்டும் மனிதரின் மூளையை வில்லன் இயக்குவது.
நம்ப முடியலனாலும் ஏற்கனவே நம்ப முடியாத நெறைய சீன் பாத்த
நமக்கு இத நம்பிடலாம்.

மொத்தமாக ஏழாம் அறிவு நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது ஆனால்
முதல் பாதியை தவிர்த்து...!

இரண்டாம் பாதிக்காக தான் இந்த படத்துக்கே மார்க் போடுவாங்க..!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தமிழ் மற்றும் இந்தியப் படம்.

ஏழாம் அறிவு - மூன்றை அறிவு தான் இருக்கு (மீதி மூன்றை முதல் பாதி சாப்ட்ருச்சு சரியா )

- நட்புடன் கவித்தோழன்





ஏழாம் அறிவு

ஒரு மனிதனுக்கு ஆறு அறிவு இருக்குனு நாம கேள்வி பட்டதுண்டு ...

அது என்ன ... அந்த அறிவுகளின் நிலை என்ன ...நாம் கொஞ்சம் பார்க்கலாம்..!

1.பார்வை

பார்வை பல்வேறு நிறங்கள், வண்ணச்சாயல்கள், மற்றும் பொலிவிற்காக மின் நரம்பு தூண்டுதல் உருவாக்கும் என்று ஒவ்வொரு கண்ணின் விழித்திரையில் photoreceptors தெரியும் ஒளியின் படங்களை கவனம் மற்றும் கண்டறிய கண் (கள்) திறனை உள்ளன. கம்பிகள் மற்றும் கூம்புகள்: photoreceptors இரண்டு வகைகள் இருக்கின்றன உள்ளன. தண்டுகள் ஒளி மிகவும் முக்கியமான உள்ளன, ஆனால் நிறங்கள் வேறுபடுத்தி இல்லை. கூம்புகள் வண்ணங்கள் வேறுபடுத்திப்பார்க்க, ஆனால் குறைஔ குறைவான உணர்திறன் உள்ளது. இந்த ஒன்று, இரண்டு அல்லது மூன்று புத்தி என்பது என சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன உள்ளது. Neuroanatomists பொதுவாக பல்வேறு வாங்கிகள் நிறம் மற்றும் வெளிச்சத்தை உணர்வு பொறுப்பு என்று கொடுக்கப்பட்ட, இரண்டு உணர்வுகள் என குறிப்பிடுகின்றன. சில வாதிடுகின்றனர் [சான்று தேவை] stereopsis, இரண்டு கண்கள் பயன்படுத்தி ஆழம் உணர்தல், ஒரு உணர்வு என்பது, ஆனால் அது பொதுவாக செயல்பாடு மூளையின் காட்சி கார்டெக்ஸின் (அதாவது, பிந்தைய உணர்ச்சி) ஒரு மனநல கருதப்படுகிறது என்று எங்கு வடிவங்கள் மற்றும் பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் முன்பு கற்று தகவல் அடிப்படையில் விளக்கம் செய்யப்படுகின்றன படங்களில், இந்த காட்சி நினைவகம் என்று அழைக்கப்படுகிறது. பார்க்க முடியாத குருட்டு தன்மை என்று அழைக்கப்படுகிறது.

2.
ஒலி உணர்தல்

கேட்பது(காது) அல்லது தேர்வு ஒலி உணர்தல் உணர்வு உள்ளன. விசாரணை அதிர்வு பற்றி அனைத்து உள்ளது. Mechanoreceptors அகச்செவி அமைக்கப்பட்டுள்ள மின் நரம்பு பருப்பு வகைகள், ஒரு இயக்கம் முறை. இந்த அதிர்வுகளை இயந்திரத்தனமாக முடி போன்ற இழைகள் சிறிய எலும்புகள் ஒரு தொடர் மூலம் செவிப்பறை இருந்து நடத்தப்பட்ட ஏனெனில் ஒலி இருந்து காற்று, கேட்கும் உணர்வு என்று இந்த அதிர்வுகளின் கண்டறிதல்,, ஒரு ஊடகத்தின் மூலமாக பெருகக்கூடிய அதிர்வுகளை ஒரு இயந்திர உணர்வு உள்ளது 20,000 வரை சுமார் 20 ஹெர்ட்ஸ் ஒரு எல்லைக்குள் ஃபைபர்களின் இயந்திரவியல் இயக்கம் கண்டறிய இது உள் காது, ல், [3] தனிநபர்கள் இடையே கணிசமான மாற்றங்களை கொண்டு. உயர் அலைவரிசைகளில் கேட்டு வயது அதிகரிப்பு குறைகிறது. கேட்க முடியாத செவிடு என்று அழைக்கப்படுகிறது. ஒலி கூட tactition உடல் மூலம் நடத்தப்பட்ட அதிர்வுகளை என கண்டறிய முடியும். கேள்வி முடியும் விட குறைவான அதிர்வெண்கள் இந்த வழி கண்டறியப்படலாம்.

3.சுவை

சுவை
(அல்லது, மிகவும் சாதாரண சொல், சுவைத்தல்; பெயரடைக்குரிய வடிவம்: "சுவைசார்") பாரம்பரிய ஐந்து புலன்களின் ஒரு உள்ளது. இது போன்ற உணவு, சில கனிமங்கள், மற்றும் நச்சு பொருட்கள் சுவையை கண்டறியும் திறனை குறிக்கிறது, பல மனிதர்கள் சுவையரும்புகளில் என்று உணர்வு உறுப்புகள் மூலம் சுவை, அல்லது மொழி மேல் பரப்பில் குவிப்பு சுவைசார் calyculi, பெறுகின்றன. இனிப்பளவு, கசப்பு, sourness, saltiness, மற்றும் umami: சுவை உணர்வை ஐந்து அடிப்படை சுவை வகைப்படுத்தலாம்.


4.வாசனை

வாசனை அல்லது நுகர்தல் மற்ற "இரசாயன" உணர்வு உள்ளன. சுவை போலல்லாமல், மோப்பம் வாங்கிகள் நூற்றுக்கணக்கான ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு வசதிக்கு, ஒவ்வொரு பிணைப்பு (388 [4] ஒரு மூல படி) அங்கு உள்ளன. வாசனையை மூலக்கூறுகள் அம்சங்கள் பல்வேறு கொண்டிருக்கின்றன மற்றும், இதனால், அதிக அல்லது குறைந்த கடுமையாக குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு எக்ஸைட். பல்வேறு வாங்கிகள் இருந்து எக்சிடேடரி சமிக்ஞைகள் இந்த கலவையை நாம் மூலக்கூறு வாசனை வருவது என்ன செய்கிறது. மூளையில், நுகர்தல் மோப்பம் கணினி மூலம் செயல்படுகிறது. மூக்கு உள்ள மோப்பம் வாங்கி நியூரான்கள் அவர்கள் இறந்து ஒரு வழக்கமான அடிப்படையில் மறுஉற்பத்தி என்று மிக மற்ற நியூரான்கள் இருந்து வேறுபடுகின்றன. வாசனை இயலாமை முகர் அழைக்கப்படுகிறது. மூக்கு சில நியூரான்கள் பெரோமொநெஸ் கண்டறிய சிறப்பு உள்ளன. [5]



5.தொடு

டச், என்று அழைக்கப்படும் tactition அல்லது mechanoreception, நாக்கு, தொண்டை, மற்றும் சளி கூட மயிர்க்கால்கள் உட்பட தோல் பொதுவாக, நரம்பியல் வாங்கிகளின் செயல்படுத்தும் விளைவாக ஒரு உணர்வு உள்ளன, ஆனால். அழுத்தம் வாங்கிகள் ஒரு வகையான அழுத்தத்தை மாறுபாடுகள் (நிறுவனம், துலக்குதல், நீடித்த, இன்னபிற) பதிலளிக்க. பூச்சி கடித்தது அல்லது ஒவ்வாமை ஏற்படும் அரிப்பு மற்றும் தொடு உணர்வு தோல் மற்றும் தண்டுவட சிறப்பு அரிப்பு-குறிப்பிட்ட நரம்பணுக்களின் அடங்கும். [6] தொட்டது எதையும் உணர திறன் இழப்பு அல்லது சேதம் தொட்டுணரக்கூடிய மயக்க மருந்து என்று அழைக்கப்படுகிறது. புலன் உணர்ச்சிகளை அளவிற்கு மீறி உணர்தல் கூச்ச உணர்வு, ஊசி குத்துவதற்கு இலக்காகும், அல்லது நரம்பு பாதிப்பு ஏற்படக்கூடும் மற்றும் நிரந்தர அல்லது தற்காலிக இருக்கலாம் என்று தோலின் உணர்வின்மை ஒரு உணர்வு உள்ளது.

6.பகுத்தறிவு

பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

இந்த ஆறறிவு இல்லாத ஒரு பெரிய அறிவு ஒன்று உண்டு அது தான் வலி...!

7.வலி

Nociception (உடல் வலி) நரம்பு-சேதம் அல்லது திசு சேதம் சமிக்ஞைகள். வலி வாங்கிகள் மூன்று வகையான சருமம் உள்ளது (தோல்), உடலியலுக்குரிய (மூட்டுகள் மற்றும் எலும்பு), மற்றும் உள்ளுறுப்பு (உடல் உறுப்புகள்). இது முன்பு வலி வெறுமனே அழுத்தம் வாங்கிகளின் ஓவர்லோடிங் என்று நம்பப்படுகிறது, ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆராய்ச்சி அந்த வலி ஒரு தனிப்பட்ட நிகழ்வு இது சுட்டிக்காட்டுகிறது என்று தொட்டு உட்பட மற்ற உணர்வுகளின் அனைத்து intertwines,. வலி முறை முற்றிலும் உள்ளுணர்வு அனுபவம் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய ஆய்வுகள் வலி மூளையின் முன்புற சிங்குலேட் மேன்மடிப்பு பதிவு என்று காட்ட இருந்தது. [8] வலி முக்கிய செயல்பாடு ஆபத்துக்களை பற்றி எச்சரிக்க உள்ளது. உதாரணமாக, மனிதர்கள் ஒரு கூர்மையான ஊசி அல்லது சூடான பொருள் தொடுதல் அல்லது அது புண்படுத்துகிறது ஏனெனில் ஒரு பாதுகாப்பான எல்லையில்லாமல் ஒரு கையை நீட்டி தவிர்க்க, இதனால் ஆபத்தானது. வலி இல்லாமல், மக்கள் அதை உணராமலேயே பல அபாயகரமான விஷயங்களை செய்ய முடியும்?

இதுவெல்லாம் இல்லாம நம்மகிட்ட இருக்கும் சில அறிவுகள்.

தெரிஞ்சே அடிச்சிட்டு தெரியாத மாறி நிக்கும் வில்லத்தன அறிவு (சின்ன பிள்ளை ல ஆரம்பிச்சு பெரியா ஆள் ஆனா கூட இந்த வில்லத்தனம் நிரம்ப வாழ்கிறவர்கள் மிக நிறைய இருக்கிறார்கள் ) தப்ப தெரியாம செய்வதில் இவர்கள் கில்லாடிகள்..என்றாவது சிக்கிவிடுவார்கள் சிலர் மட்டும் எஸ்கேப்..!

இன்ஸ்டன்ட் பொய் சொல்றது ..சார் நேத்து நைட்லேந்து உடம்புக்கு முடியல சார்,ட்ராபிக்ல மாட்டிகிட்டேன் மா மற்றும் இன்ன பிற பொய்கள்.சத்தியமா சொல்கிறேன் என்று ஆரம்பிக்கும் வார்த்தைகள் அனைத்தும் நிறைய பொய்களை கொண்டது...(யாராச்சும் சத்யம் பண்ணி பேசுனா இனிமே கண்டுபிடிச்சுடுங்க) பொய் தான் சொல்றாங்கன்னு கண்டுபிடிக்க ஒரு சின்ன பழைய டெக்னிக் (உங்க முன்னாடி பேசறவர் கண்ணை பாருங்க அவரால் நீங்கள் அப்படி பாக்கும்போது

அவ்வளவு சுலபமா சொல்லமுடியாது...இத தெரிஞ்சிகிட்டு அவங்க பேசினா அதுக்கு நான் பொறுப்பு ஆகா முடியாது)

பஸ்ஸில் சீட்போடும் அறிவு,படிப்பது போல் நடிக்கும் அறிவு,ஒன்னுக்கு மூணு பொண்ணுங்களோட காதல் பண்ணி (தீராத விளையாட்டு பிள்ளை மாதிரி ) அவங்க மூணு பேரையும் சமாளிக்கும் ரொமான்ஸ் அறிவு,ஆபிசில் வேலை செய்வது போல் பேஸ்புக் கில் சாட் போடும் இணைய அறிவு....!

இப்படி நிறைய ஏழாம் அறிவு நம்மில் கொட்டி கிடக்குது..!

சூர்யா - முருகதாசின் ஏழாம் அறிவு னு நினச்சு உங்கள இங்க வர வச்ச என்னுடைய ஏழாம் அறிவு ( பதிவு அறிவு ) எப்புடினு நீங்க தான் சொல்லணும்...











Wednesday, October 19, 2011

தேர்தல் 'மங்காத்தா' - ஒரு தேர்தல் நடந்து முடிந்தது..!


பொள்ளாச்சி ஐயோ (ஒலிபெருக்கியில் அப்பாடி தாங்க சில நேரம் கேக்குது ) உள்ளாட்சி தேர்தல் தான் நாம கடந்த சில நாட்களாக கொண்டாடிய அட்வான்ஸ் தீபாவளி...!

வாக்காள பெருமக்களே,வாக்காள வள்ளல்களே..! அதையும் மீறி சில பேர்
கொடுத்த காசுக்கு மேல் கூவுனா வாக்காள கடவுள்களே..! (இது தான் வோட்ட போட்டு அஞ்சு வருஷம் வாய முடி சும்மா இருக்கும் மக்களின் தேர்தல் சீசன் பெயர்கள் )

இருபது தெரு மட்டுமே நிக்கும் மெம்பர் கூட நாற்பது பாயிண்டு தேர்தல் அறிக்கை எழுதி அச்சிட்டு கொடுக்கறாங்க...

இந்த தேர்தலில் ஒரு அபூர்வ அறிக்கை ஒன்னு படிச்சேன் மக்களுக்கு இயற்கையின் வளமான சுத்தமான குடிநீர் (அது இபோ பூமிலேயே கிடையாது ),சுத்தமான காற்று மற்றும் சூரிய வெளிச்சத்துடன் கூடிய வீடு கட்டி கொடுக்க படும்...(விடறதுக்கு ஒரு அளவே இல்லாம இயற்கைய கூட கூட்டுக்கு குபிட்றாங்க)

எப்டியும் எதாச்சும் கொடுத்தா கண்டிப்பா நமக்கு தான் வோட்டு போடுவான்னு
எல்லா கட்சி காரங்களும்(சரக்கு,முறுக்கு, சைடு டிஷ் பிரியாணி ) என பலவாறு
கவனித்தார்கள்...

இதுல நம்ம ஆளுங்க கொஞ்சம் உஷார்.. எல்லாரிடமும் போய் முடிந்த அளவு எவ்வளவு ஆட்டைய போட முடியுமோ அவ்ளோ ஆட்டைய போட்டாங்க..!

கடைசி நேர பிரச்சாரம் தான் ஹைலைட்..!

எவன் யாருக்கு வோட்டு கேக்குறான்னு மக்கள்கு குழப்பம் வர அளவுக்கு
எல்லாரும் ஒரே இடத்தில் குழுமி கும்மியடித்தார்கள் (சாரி பாஸ்) வோட்டு கேட்டார்கள்..!

பிரசாரம் முடிஞ்சுருச்சு ... அடுத்தது என்ன ?

நேத்து வேலையிருந்தவன் கூட வீடு விட்டு வெளிய போல காரணம் என்ன தெரியுமா?

அவன் போன நேரத்துல எந்த கட்சி காரனாச்சும் வந்து காசு கொடுக்க இவன் இல்லாம போய்ட்டா ...அவனா மனசார கொடுக்றதும் கெட்டுவிடுமே (மிக பெரிய ஜனநாயக எண்ணம் இது )

எங்க வார்டுல ஆளுங்கட்சி,எதிர்கட்சி, ஆண்ட எதிர்க்கட்சி,பழ கட்சி என ஏழு பேரு போட்டியிட்டாங்க..!

இதுல ஆண்ட எதிர்கட்சி தான் இங்க அதிகமா தேர்தல் பாசனம் பாச்சுனாங்க..!

மற்ற மூணு கட்சி அண்டு ஒரு சுயட்சை னு எங்க ஏரியாவுல ஆளுக்கு சுமார்
ஆயிரம்(ஏன் என்றால் எல்லாருக்கும் கொடுக்காம தேர்ந்தெடுத்து சிலருக்கு மட்டும் கொடுத்ததால் இந்த அமௌன்ட்)

வோட்டுக்கு பணம் வாங்குவது தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திக்கொள்வதர்க்கு சமம் என நான் நினைப்பதாலா? இல்ல,இவன் ஒரு வோட்டு முக்கியமில்லைனு விட்டுட்டாங்களான்னு தெர்ல (உபயம் - என் அம்மா பாரின் போயிருக்காங்க)வீட்டில் இப்போ என் வோட்டு மட்டும் தான்.நமக்கு மட்டும் பாசனத்தில் ஒரு பகுதியும் வரவில்லை( மிக்க மகிழ்ச்சி ..ஏன் என கீழே சொல்றேன்).

இன்று காலை நடந்த சம்பவம்...!

என்னோட பூத் ஸ்லிப் யாரோ எடுத்துகிட்டாங்க...

எங்களுக்கு கடந்த வருடமா தெரிந்தவரும் ஒரு வேட்பாளர் தான் ....

நான் பூத்கு போறதுக்கு முன்னாடி அவரிடம் போய் என் பூத் ஸ்லிப் நம்பர் வாங்கிட்டு பூத்துக்கு போனேன்.

போகும் வழியெங்கும்....

வோட்டு கேட்டு வேட்பாளர்கள் (மினி அண்டு ஸ்பாட் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள் )

எல்லார்டையும் கைய காமிச்சிட்டு ...

லைன்ல நின்னு வோட்டை போட்டேன்...!

யார்ட்டையும் காசு வாங்காததால நமக்கு ஏற்படாமல் போன விஷயம்...

இன்று பலருக்கும் அரங்கேறியது...

அது என்னவா இருக்கும் கீழ இருக்கும் வீடியோ பாத்து தெரிஞ்சிகோங்க..!

http://www.youtube.com/watch?v=O4CeSLtFetc

இந்த தேர்தலில் யார் குழம்பி போனார்களோ இல்லையோ எல்லார்டையும் காசு வாங்கிட்டு யாருக்கு வோட்டு போடறது ... இவன் கிட்ட வாங்கிட்டு இவனுக்கு போடாம விட்ட நாளைக்கு தெருல நின்னு கத்துவானே...அதுவே பெண்களா இருந்தா மானாவாரியா மண்ணு அள்ளி வீசுவாங்க...என்ன நடக்குமோ னு காச
வாங்கிட்டு தூக்கத்துல கனவு வேட்பாளர் திட்ற மாறியே பீல் பண்ற நம் வாக்காள கடவுள்கள் தான்..!

இவ்ளோ காசு வாங்கியும் ..சிலர் வாங்காமலும் வோட்டு போடாமல் வீட்டில்
இருந்தவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ....

தலயோட சிட்டிசன் படத்துல கடசில அந்த மூணு பேருக்கும் கொடுக்கணும்னு தல சொல்ற தீர்ப்பு தான் ...!

எவன் லாம் வோட்டு போடலையோ அவனோட குடிஉரிமைய புடிங்கிடலாம்...!

இத்துடன்

இன்று முடிந்து ...காலமும் காலனும் அனுமதித்தால் நாளை சந்திக்கலாம்...

விரைவில் .... வெட்டு குத்து வெள்ளிகிழமை...!

என்னாட இவன் தேர்தல் மங்காத்தா னு தலைப்பு வச்சிருக்கானே னு நினைத்தவர்களுக்கு ...

மங்காத்தா படத்துல கூட தான் கடைசி சீன்ல அர்ஜுன் சொல்வாரு 'நான் உள்ளே நீ வெளியே' னு அத படம் ஆரம்பிச்ச உடனே காமிச்சிருந்தா படம் பப்படம் ஆகிருக்கும் அது போல தேர்தல் னு சொன்னாலே , பதவிக்கு 'ஒரு ஆள் உள்ளே , ஒரு ஆள் வெளியே " அதானே அர்த்தம்.


நட்புடன் ..கவித்தோழன்