என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Wednesday, July 24, 2013

மரம் வளர்ப்போம்...! மழை பெறுவோம்...!


மனிதா! மனிதா!! 
ஒரு நிமிடம்;






நான் சொல்வதைக் கேள்
ஒரு நிமிடம்;

வெயிலில் நிழலை கொடுத்தேன் நான்
சுத்தமான காற்றை கொடுத்தேன் நான்
எனை நீ வெட்டுவது சரிதானா?
எனை நீ அழிப்பது முறைதானா?


உலகின் வெப்பம் ஏறியதே
காற்றும் மாசாய் மாறியதே
இவைகளின் காரணம் தெரியலையா?
என்னை வெட்டுவது தவறென புரியலையா?


மழைநீர் இப்போ வற்றிவிட்டது
புதிதாய் சுனாமி வந்துவிட்டது
இதற்கும் காரணம் தெரியலையா?
என்னை அழிப்பதாலெனப் புரியலையா?



இயற்கையோடு ஒத்து வாழென
பெரியோர் கூரியது மறந்துவிடாதே!
செயற்கை வாழ்வு
நிம்மதியை கெடுப்பதை மறுத்துவிடாதே!



நண்பனே!
உன் ஆயுதத்தை கீழேப்போட்டு வா
நாம் இருவரும் சேர்ந்து
மரம் வளர்ப்போம்!மழை பெறுவோமென
உலகெங்கும் சென்று
உரக்க சொல்லுவோம்!