என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, September 24, 2009

பெரியோர் செப்பு மொழிகள் ( பாகம் - 2 )

01. சோதனையின் போதும் சவாலான தருணங்களிலும் ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை வைத்துத்தான் ஒரு மனிதனை துல்லியமாக மதிப்பிட முடியும் -மார்டின் லூதர் கிங்

02. எதைச் செய்யக்கூடாதோ அதை திறம்படச் செய்வது போல வெட்டிவேலை உலகில் எதுவும் கிடையாது - பீட்டர் டிராக்டர்

03. உங்களது நாட்கள், உங்களது வாழ்க்கையின் சிறிய வடிவங்கள், இன்று நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. - கார்ல் மார்க்ஸ்

04. அதிகமான வேலை செய்வதென்பது சரியான வேலையைச் செய்வதற்கு இணையாகாது - ஸ்டீபன் ஆர். கோவி.

05. யார் வேண்டுமானாலும் கோபம் அடையலாம், அது மிகச் சுலபம். சரியான நபரிடம், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான காரணத்துக்காக, சரியான முறையில் கோபப்படுவதற்கு எல்லோராலும் முடியாது. அது சுலபமான காரியமும் அல்ல.
- அரிஸ்டாட்டில்

06. என்னிடமுள்ள சிறந்த அம்சங்களை வெளிக்கொண்டு வருபவனே எனது சிறந்த நண்பன் - கென்றி போட்.
07. மனித குலத்தை ஆட்சி செய்வது அதன் கற்பனைத் திறன்தான்
- நெப்போலியன் பொனபாட்.
08. நமது முக்கியமான பிரச்சனையை தீர்க்கும்போது ஓர் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். அந்தப் பிரச்சனையை உருவாக்கிய அதே பழைய சிந்தனை மட்டத்தால் அந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது. - அல்பார்ட் ஐன்ஸ்டைன்.
09. இதுவரை நான் படித்திராத விடயங்களை உள்ளடக்கிய நல்ல புத்தகத்தை என்னிடம் தருபவனே எனது சிறந்த நண்பன் - அபிரகாம் லிங்கன்.
10. நம்பிக்கைதான் யதார்த்தத்தைப் படைக்கிறது. - வில்லியம் ஜேம்ஸ்


11. பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். ஆனால் விட்டு ஓடாதே, இப்பொழுது சிரமப்படு, பின் வாழ்நாள் முழுவதும் சாம்பியனாக வாழலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் உலக சாம்பியன் ஆனேன் - குத்துச்சண்டை வீரர் முகமது அலி.
12. தொடர்ச்சியான ஈடுபாடு, கடின உழைப்பு, விடாமுயற்சி, இந்த மூன்றும்தான் சாதனையாளரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. - தாமஸ் கார்லைஸ்.
13. வாழ்க்கையில் தோல்வி கண்டவர்களில் ஏராளமானவர்கள் வெற்றியை நெருங்கிவிட்டதை அறியாமல் தமது முயற்சிகளைக் கைவிட்டவர்களே. - தாமஸ் எடிசன்.
14. சிலர் நம்மை சுற்றியிருப்பவர்கள் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தால் மட்டும் வெற்றி பெறுகிறார்கள். இன்னும் சிலர் நரகமே வந்து தடுத்தாலும் கூட உடைத்தெறிந்து வெற்றி பெறுகிறார்கள். இந்த இரண்டு பிரிவுகளில் நீங்கள் எதில் இடம் பெறப் போகிறீர்கள் ? - நெப்போலியன் கில்.
15. நமது சிந்தனைகளை நமது உணர்ச்சி பூர்வமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதுதான் மனித நாகரிகத்தின் உயர்ந்த கட்டம். - சார்லஸ் டார்வின்.

16. வெற்றி பெற விடா முயற்சிதான் மிகமிக அவசியமானது. விடா முயற்சி எதையும் வென்றுவிடுகிறது. இயற்கையைக் கூட வென்றுவிடுகிறது - ஜே.டி.ரொக்பெல்லர்
17. திரும்ப திரும்ப எதைச் செய்கிறோமோ அதுதான் நாம். உன்னதம் என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம் - அரிஸ்டாட்டில்
18. பெரிய சாதனைகள் பலத்தால் அல்ல, தொடர்ந்து முயற்சிப்பதனாலேயே நிகழுகின்றன. - சாமுவேல் ஜான்சன்.
19. வாழ்க்கையின் துயரம் இலக்கை அடையாமல் சிரமப்படுவது அல்ல, இலக்கே இல்லாமல் இருப்பதுதான் - பென்சமின்
20. உங்களது உயர்வான இலக்குகளை சிறுமைப்படுத்துவோரிடமிருந்து விலகியே நில்லுங்கள் - மார்க் ட்வைன்.
21. உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள் உங்கள் உலகமே மாறிவிடும். - தாமஸ் வின்ஸ்டன் பீலே
22. எனது வலிமை எனது விடாப்பிடியான பண்பில்தான் தங்கியுள்ளது - லூயி பாஸ்டர்.
23. சுவர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சுவர்க்கமாகவும் மாற்ற மனதால் முடியும் - மில்டன்
24. எப்போதுமே வாய்ப்புக்கள் மீதும் சவால்கள் மீதும் உங்கள் கவனத்தை குவியுங்கள். பிரச்சனைகள் தோல்விகள் என்று நீங்கள் கருதுபவற்றின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்காதீர்கள் - வால்டர் டோயல் ஸ்டேபிள்
25. உற்சாகத்தை இழந்து விடாமலே ஒரு தோல்வியில் இருந்து மற்றொரு தோல்விக்கு செல்வதுதான் வெற்றி - வின்ஸ்டன் சேர்ச்சில்.

பணமும்..! குணமும்...!!

மனிதனிடமிருந்து
பணத்தைப் பிரிப்பது குணம்
குணத்தைப் பிரிப்பது பணம்;

உலகில்
மதங்கள் ஆயிரம்
ஜாதிகள் கோடியென உலவினும்
சமுதாயத்தில் மனிதன்
ஏழை பணமுடையான் எனும்
இருவகையில் தான்
பார்க்கப்படுகிறான்
பிரிக்கப்படுகிறான்;

தன் இருப்பிடத்தில்
மகிழ்வையும் மதிப்பையும் கொடுப்பதன்றி
வேற்றொரு குணமில்லை பணத்திற்கு
அதைக் கொண்ட மனிதன் தான்
தீ வைத்துத்கொள்கிறான்
தன் குணத்திற்கு;

இரத்தச் சொந்தங்கள்
பால்ய நண்பர்கள்
யாவரும் விலகிடுவர்
பணம் கொண்ட நேரத்தில்
ஆணவம் கொண்ட மனிதனை விட்டு ;

பணம்
சில மனிதரின் மனதை
கொடை உள்ளமாய் மாற்றுகிறது
பல மனிதரின் மனதில்
கோடையாய் அவர் குணத்தை
வற்றவைக்கிறது;

பொதுநலவாதி கூட
சுயநலவியாதி பிடித்து அலைவார்
பணத்தை அவர் துணையாக்கும்போது

பணம் மாற்றுகிறதா குணத்தை?
இல்லை
குணம் மாறுகிறதா பணத்தால்?
இவ்விடை தெரியா வினவுகள்
உலகில் உலவுகின்றன
இன்றும் கொடை மன மனிதர்கள்
சில‌ர் வாழ்ந்து கொண்டிருப்பதால்!

உலகில் யாரும் தினம்
பார்க்க போவதில்லை பணம்
மனிதருக்கு மிக முக்கியம்
நல்ல குணத்தோடு ஓர் மனம்!

- க‌வித்தோழன் -

Saturday, September 19, 2009

பெரியோர்களின் செப்பு மொழிகள்...!!!

ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
- அரிஸ்டாட்டில்.


மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
- மாத்யூஸ்.


நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக
விரும்பாதே.
-நியேட்சே.


வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.
- பிராய்டு.


அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- புத்தர்.

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.
- முகம்மது நபி.


சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
- ஸ்டீலி.

மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
- வள்ளலார்.


இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
- பிரேண்டர்ஜான்சன்.


ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.
- சாமுவேல் பட்லர்.

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.
- கீர்கே கார்ட்.


நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.
- தாமஸ் புல்லர்.

தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
- டிரெட்ஸி.


இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
- மகாகவி பாரதியார்.


அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.
- கில்ப்பின்.


நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.
-சுவாமி மித்ரானந்தா.

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.
- ஆபிரஹாம் லிங்கன்.

கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.
-பிராங்க்ளின்

ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.
- பெர்னாட்ஷா.


அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி
விடுகிறது.
- சர்ச்சில்.

தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.
- ஜி.டி.நாயுடு.


நமது அறிவு என்பது எறும்பு என்றால் வாழ்க்கையும் இந்த உலகமும் யானையைப் போன்றது.
- சுவாமி சுகபோதானந்தா.


பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.
-வைரமுத்து.


தோல்வி இல்லாமல் கிடைக்கப்பெறும் எவ்வித வெற்றியிலும் நிறைவு கிடையாது.
- அடியேன் முயற்சித்தது.

நட்புடன்......கவித்தோழன்