என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, September 24, 2009

பணமும்..! குணமும்...!!

மனிதனிடமிருந்து
பணத்தைப் பிரிப்பது குணம்
குணத்தைப் பிரிப்பது பணம்;

உலகில்
மதங்கள் ஆயிரம்
ஜாதிகள் கோடியென உலவினும்
சமுதாயத்தில் மனிதன்
ஏழை பணமுடையான் எனும்
இருவகையில் தான்
பார்க்கப்படுகிறான்
பிரிக்கப்படுகிறான்;

தன் இருப்பிடத்தில்
மகிழ்வையும் மதிப்பையும் கொடுப்பதன்றி
வேற்றொரு குணமில்லை பணத்திற்கு
அதைக் கொண்ட மனிதன் தான்
தீ வைத்துத்கொள்கிறான்
தன் குணத்திற்கு;

இரத்தச் சொந்தங்கள்
பால்ய நண்பர்கள்
யாவரும் விலகிடுவர்
பணம் கொண்ட நேரத்தில்
ஆணவம் கொண்ட மனிதனை விட்டு ;

பணம்
சில மனிதரின் மனதை
கொடை உள்ளமாய் மாற்றுகிறது
பல மனிதரின் மனதில்
கோடையாய் அவர் குணத்தை
வற்றவைக்கிறது;

பொதுநலவாதி கூட
சுயநலவியாதி பிடித்து அலைவார்
பணத்தை அவர் துணையாக்கும்போது

பணம் மாற்றுகிறதா குணத்தை?
இல்லை
குணம் மாறுகிறதா பணத்தால்?
இவ்விடை தெரியா வினவுகள்
உலகில் உலவுகின்றன
இன்றும் கொடை மன மனிதர்கள்
சில‌ர் வாழ்ந்து கொண்டிருப்பதால்!

உலகில் யாரும் தினம்
பார்க்க போவதில்லை பணம்
மனிதருக்கு மிக முக்கியம்
நல்ல குணத்தோடு ஓர் மனம்!

- க‌வித்தோழன் -

2 comments:

  1. /மனிதருக்கு மிக முக்கியம்
    நல்ல குணத்தோடு ஓர் மனம்! /

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. கவிதை அழகு.. வலைப்பூவும் அழகு.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete