என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, April 25, 2009

நட்பு!!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்
வானத்தை தீண்டும் மேகமில்லை நட்பு
என்றும் ஓரிடம் இருக்கும் நட்சத்திரம்
நட்பு;

என் உடலில் ஒரு உலகம் உண்டு
ஆனால் அதை இன்றுவரை நான்
பார்த்தது இல்லை;
அது ஒரு கனம் துடிக்க மறந்து விட்டால்
நான் ஒரு பிணம்
அதுபோல
நட்பு மனதிலிருக்கும் இடம்
யாருக்கும் தெரியாது;

தினம் நான் செல்லும் வழியில்
ஒரு ரோஜா புதிதாய்
பூத்திருப்பதை கண்டேன்;

அதனழகு என்னை கவர்ந்திழுத்தது
பிறகு பறித்து விடலாமென்று கடந்துவிட்டேன்
அரை மணி கழித்து பார்த்தால்
செடியில் அது இல்லை;

ஏமாற்ற மிகுதியில் சோகத்துடன்
பள்ளிக்கூடம் சென்று பார்த்தேன்
என் நண்பன் கையில் அந்த ரோஜா
எனக்காக!

அலைகளும் என்றாவது ஒரு நாள்
தன் எல்லையைத் தாண்டி விடும்
நட்பு என்றுமே
அதன் தன்மை மாற்றாது;

உலக இலக்கணத்தில் நட்பை பிரிக்க
முடியாத காரணம்
அது கடவுள் படைத்த உறவல்ல
மனிதன் உருவாக்கிய உறவு;

நட்போடு பழகுங்கள்!
நட்பால் உலக ஒற்றுமை ஓங்கட்டும்!!
-கவித்தோழன்



ஒரு கோடி வணக்கம் தமிழே!!


வரலாறு சில கோடி
புராணங்கள் பல கோடியென
தாய் உன்னை காத்து வந்தோம்
உன் துணையால் வாழ்ந்து வந்தோம்;


அன்னிய மொழியின் ஆதிக்கத்தில்
அன்னையே உன்னை பலர்
மறந்து விட்டோமென
நினைத்து விட வேண்டாம்;

வாடிய பயிரை கண்டே
வாடிய தமிழருக்கு
பிற உயிர் கெடுக்கும்
மனம் இருக்காது;

தமிழை அழிக்க
யாவராலும் முடியாது
உலகில் எங்காவது ஒருவனதன்
அகரம் அறியும் வரை;

ஆம்!
தமிழுக்கும் தமிழனுக்கும்
இது வீழ்ச்சி பருவம் தான்;
பல வீழ்ச்சி பருவங்கள் தான்
ஒரு எழுச்சி பருவத்தை
நமக்கு அறிமுகப்படுத்தும்;

தோழர்களே!!

நம் எண்ணத்துடனும் எழுத்துடனும்
தமிழ்த்தாய்க்கு துணை நின்றால்
அவளுக்கு என்றுமே
வெற்றி பருவமே!!

-கவித்தோழன்