என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, April 25, 2009

ஒரு கோடி வணக்கம் தமிழே!!


வரலாறு சில கோடி
புராணங்கள் பல கோடியென
தாய் உன்னை காத்து வந்தோம்
உன் துணையால் வாழ்ந்து வந்தோம்;


அன்னிய மொழியின் ஆதிக்கத்தில்
அன்னையே உன்னை பலர்
மறந்து விட்டோமென
நினைத்து விட வேண்டாம்;

வாடிய பயிரை கண்டே
வாடிய தமிழருக்கு
பிற உயிர் கெடுக்கும்
மனம் இருக்காது;

தமிழை அழிக்க
யாவராலும் முடியாது
உலகில் எங்காவது ஒருவனதன்
அகரம் அறியும் வரை;

ஆம்!
தமிழுக்கும் தமிழனுக்கும்
இது வீழ்ச்சி பருவம் தான்;
பல வீழ்ச்சி பருவங்கள் தான்
ஒரு எழுச்சி பருவத்தை
நமக்கு அறிமுகப்படுத்தும்;

தோழர்களே!!

நம் எண்ணத்துடனும் எழுத்துடனும்
தமிழ்த்தாய்க்கு துணை நின்றால்
அவளுக்கு என்றுமே
வெற்றி பருவமே!!

-கவித்தோழன்

No comments:

Post a Comment