
வரலாறு சில கோடி
புராணங்கள் பல கோடியென
தாய் உன்னை காத்து வந்தோம்
உன் துணையால் வாழ்ந்து வந்தோம்;
அன்னிய மொழியின் ஆதிக்கத்தில்
அன்னையே உன்னை பலர்
மறந்து விட்டோமென
நினைத்து விட வேண்டாம்;
வாடிய பயிரை கண்டே
வாடிய தமிழருக்கு
பிற உயிர் கெடுக்கும்
மனம் இருக்காது;
தமிழை அழிக்க
யாவராலும் முடியாது
உலகில் எங்காவது ஒருவனதன்
அகரம் அறியும் வரை;
ஆம்!
தமிழுக்கும் தமிழனுக்கும்
இது வீழ்ச்சி பருவம் தான்;
பல வீழ்ச்சி பருவங்கள் தான்
ஒரு எழுச்சி பருவத்தை
நமக்கு அறிமுகப்படுத்தும்;
தோழர்களே!!
நம் எண்ணத்துடனும் எழுத்துடனும்
தமிழ்த்தாய்க்கு துணை நின்றால்
அவளுக்கு என்றுமே
வெற்றி பருவமே!!
-கவித்தோழன்
No comments:
Post a Comment