என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, September 24, 2009

பெரியோர் செப்பு மொழிகள் ( பாகம் - 2 )

01. சோதனையின் போதும் சவாலான தருணங்களிலும் ஒருவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை வைத்துத்தான் ஒரு மனிதனை துல்லியமாக மதிப்பிட முடியும் -மார்டின் லூதர் கிங்

02. எதைச் செய்யக்கூடாதோ அதை திறம்படச் செய்வது போல வெட்டிவேலை உலகில் எதுவும் கிடையாது - பீட்டர் டிராக்டர்

03. உங்களது நாட்கள், உங்களது வாழ்க்கையின் சிறிய வடிவங்கள், இன்று நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது. - கார்ல் மார்க்ஸ்

04. அதிகமான வேலை செய்வதென்பது சரியான வேலையைச் செய்வதற்கு இணையாகாது - ஸ்டீபன் ஆர். கோவி.

05. யார் வேண்டுமானாலும் கோபம் அடையலாம், அது மிகச் சுலபம். சரியான நபரிடம், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான காரணத்துக்காக, சரியான முறையில் கோபப்படுவதற்கு எல்லோராலும் முடியாது. அது சுலபமான காரியமும் அல்ல.
- அரிஸ்டாட்டில்

06. என்னிடமுள்ள சிறந்த அம்சங்களை வெளிக்கொண்டு வருபவனே எனது சிறந்த நண்பன் - கென்றி போட்.
07. மனித குலத்தை ஆட்சி செய்வது அதன் கற்பனைத் திறன்தான்
- நெப்போலியன் பொனபாட்.
08. நமது முக்கியமான பிரச்சனையை தீர்க்கும்போது ஓர் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். அந்தப் பிரச்சனையை உருவாக்கிய அதே பழைய சிந்தனை மட்டத்தால் அந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது. - அல்பார்ட் ஐன்ஸ்டைன்.
09. இதுவரை நான் படித்திராத விடயங்களை உள்ளடக்கிய நல்ல புத்தகத்தை என்னிடம் தருபவனே எனது சிறந்த நண்பன் - அபிரகாம் லிங்கன்.
10. நம்பிக்கைதான் யதார்த்தத்தைப் படைக்கிறது. - வில்லியம் ஜேம்ஸ்


11. பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன். ஆனால் விட்டு ஓடாதே, இப்பொழுது சிரமப்படு, பின் வாழ்நாள் முழுவதும் சாம்பியனாக வாழலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் உலக சாம்பியன் ஆனேன் - குத்துச்சண்டை வீரர் முகமது அலி.
12. தொடர்ச்சியான ஈடுபாடு, கடின உழைப்பு, விடாமுயற்சி, இந்த மூன்றும்தான் சாதனையாளரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. - தாமஸ் கார்லைஸ்.
13. வாழ்க்கையில் தோல்வி கண்டவர்களில் ஏராளமானவர்கள் வெற்றியை நெருங்கிவிட்டதை அறியாமல் தமது முயற்சிகளைக் கைவிட்டவர்களே. - தாமஸ் எடிசன்.
14. சிலர் நம்மை சுற்றியிருப்பவர்கள் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தால் மட்டும் வெற்றி பெறுகிறார்கள். இன்னும் சிலர் நரகமே வந்து தடுத்தாலும் கூட உடைத்தெறிந்து வெற்றி பெறுகிறார்கள். இந்த இரண்டு பிரிவுகளில் நீங்கள் எதில் இடம் பெறப் போகிறீர்கள் ? - நெப்போலியன் கில்.
15. நமது சிந்தனைகளை நமது உணர்ச்சி பூர்வமான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதுதான் மனித நாகரிகத்தின் உயர்ந்த கட்டம். - சார்லஸ் டார்வின்.

16. வெற்றி பெற விடா முயற்சிதான் மிகமிக அவசியமானது. விடா முயற்சி எதையும் வென்றுவிடுகிறது. இயற்கையைக் கூட வென்றுவிடுகிறது - ஜே.டி.ரொக்பெல்லர்
17. திரும்ப திரும்ப எதைச் செய்கிறோமோ அதுதான் நாம். உன்னதம் என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம் - அரிஸ்டாட்டில்
18. பெரிய சாதனைகள் பலத்தால் அல்ல, தொடர்ந்து முயற்சிப்பதனாலேயே நிகழுகின்றன. - சாமுவேல் ஜான்சன்.
19. வாழ்க்கையின் துயரம் இலக்கை அடையாமல் சிரமப்படுவது அல்ல, இலக்கே இல்லாமல் இருப்பதுதான் - பென்சமின்
20. உங்களது உயர்வான இலக்குகளை சிறுமைப்படுத்துவோரிடமிருந்து விலகியே நில்லுங்கள் - மார்க் ட்வைன்.
21. உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள் உங்கள் உலகமே மாறிவிடும். - தாமஸ் வின்ஸ்டன் பீலே
22. எனது வலிமை எனது விடாப்பிடியான பண்பில்தான் தங்கியுள்ளது - லூயி பாஸ்டர்.
23. சுவர்க்கத்தை நரகமாகவும், நரகத்தை சுவர்க்கமாகவும் மாற்ற மனதால் முடியும் - மில்டன்
24. எப்போதுமே வாய்ப்புக்கள் மீதும் சவால்கள் மீதும் உங்கள் கவனத்தை குவியுங்கள். பிரச்சனைகள் தோல்விகள் என்று நீங்கள் கருதுபவற்றின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்காதீர்கள் - வால்டர் டோயல் ஸ்டேபிள்
25. உற்சாகத்தை இழந்து விடாமலே ஒரு தோல்வியில் இருந்து மற்றொரு தோல்விக்கு செல்வதுதான் வெற்றி - வின்ஸ்டன் சேர்ச்சில்.

1 comment:

  1. //
    17. திரும்ப திரும்ப எதைச் செய்கிறோமோ அதுதான் நாம். உன்னதம் என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம் - அரிஸ்டாட்டில்
    //

    எனக்கு பிடித்த தத்துவம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .............

    ReplyDelete