என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Wednesday, June 24, 2009

பருவம் !!!


மற்றவர் செய்வதை திருப்பிச் செய்து
சுற்றமும் மகிழ்ந்திட
நானும் மகிழ்ந்திட்டேன்
மனதிலும் செயலிலும்
இறைவனை காட்டிடும்
குழந்தையாய்;


எதிர்கால எழுச்சிக்காக
நிகழ்கால வீழ்ச்சிகளை
மனதிலே தாங்கினேன்
துணிவுடனே இளைஞனாய்;




உழைப்பாலே தேடினேன்
விடியல் பல கோடியை
விடிந்து விட்டும் தேடினேன்
சராசரி மனிதனாய்;


- ஷேக் இப்ராஹிம்

No comments:

Post a Comment