
மற்றவர் செய்வதை திருப்பிச் செய்து
சுற்றமும் மகிழ்ந்திட
நானும் மகிழ்ந்திட்டேன்
மனதிலும் செயலிலும்
இறைவனை காட்டிடும்
குழந்தையாய்;

எதிர்கால எழுச்சிக்காக
நிகழ்கால வீழ்ச்சிகளை
மனதிலே தாங்கினேன்
துணிவுடனே இளைஞனாய்;

உழைப்பாலே தேடினேன்
விடியல் பல கோடியை
விடிந்து விட்டும் தேடினேன்
சராசரி மனிதனாய்;
- ஷேக் இப்ராஹிம்
No comments:
Post a Comment