என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, June 11, 2009

குறுங்கவிதைகள்!!


மறந்து
மறைந்து
மறையாதது
ஆசை!




முகம் முழுவதாய்
நனைத்தப் போதிலும்
தலை நனைக்காத மழை
கண்ணீர்!



பிரிந்து செல்லும்
திசை அறியாததால்
கூடி நின்று அழுதன
மழையாய் மேகங்கள்!




இறுதியில் போய்
முடியும் இடம்
தெரியாமல் இருக்கின்றன
எல்லோர்க்கும் வழிகாட்டும்
பாதைகள்!







அனைவரும்
கூச்சல் போடும் நேரத்திலும்
அமைதியாய் இருந்தது
மின்சார வெட்டில் மாட்டிக்கொண்ட
ஒலிப்பெருக்கி!


No comments:

Post a Comment