என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, May 21, 2009

காதலில் ஓர் பக்குவம்!!!

சூரியனும் நிலவும் ஒரு நாளில்
ஒரு நிமிடம் மட்டும்
நேரெதிர் பக்கமாய் சந்திப்பதற்கு
காத்திருப்பது போல
காதலில் பொறுமை அவசியம்;

செடியில் பூப்பதை எல்லாம்
தான் விரும்பினாலும்
பூக்களை ரசித்து விரும்புபவர்க்கு
செடி விட்டு கொடுப்பது போல
காதலில் விட்டு கொடுத்தல் அவசியம்;

இறுதியில்

காதல் என்பது
காமம் திறக்கும் சாவியாகாமல்
மனம் திறக்கும்
புத்தகமாக இருக்க வேண்டும்
அதை படித்து இன்பம் பெறுவதை விட
நம் பக்குவம் அதிகமாகும்;

1 comment: