உன் மருதாணி ஓவியத்தின் கோடுகளை
ஒருமுறை உற்றுப்பார்
அவ்விடத்தில் நான் எழுதி
மறைத்து வைத்த கவிதைகள்
இருக்கக்கூடும்;
அதை அழித்து விடாதே
உன்னை நினைக்கும்
என் மனம் வலிக்கக்கூடும்;
மருதாணி ஒவியத்தின் பின்னாலே
அழகு நிலவை மறைத்து வைத்த ஒவியன்
கண்டிப்பாக அந்த பிரம்மன் தான்;
அப்படி மறைக்க காரணம்
அது உலகிலுள்ள
அனைத்து அழகாலும் செய்ததால் தான்;
அந்த அழகு வேரு யாருமில்லை
நீதான்!
No comments:
Post a Comment