என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, May 9, 2009

" நீதான்!! "

உன் மருதாணி ஓவியத்தின் கோடுகளை
ஒருமுறை உற்றுப்பார்
அவ்விடத்தில் நான் எழுதி
மறைத்து வைத்த கவிதைகள்
இருக்கக்கூடும்;
அதை அழித்து விடாதே
உன்னை நினைக்கும்
என் மனம் வலிக்கக்கூடும்;
மருதாணி ஒவியத்தின் பின்னாலே
அழகு நிலவை மறைத்து வைத்த ஒவியன்
கண்டிப்பாக அந்த பிரம்மன் தான்;
அப்படி மறைக்க காரணம்
அது உலகிலுள்ள
அனைத்து அழகாலும் செய்ததால் தான்;
அந்த அழகு வேரு யாருமில்லை
நீதான்!

No comments:

Post a Comment