என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, May 9, 2009

உறங்கிடு என் தோழியே!!

இறைவன்
நிலவினில் அழகினை கொடுத்தன் காரணம்
தன் துணை அதைவிட அழகென்று
தெரியத்தான்;

நட்சத்திரத்தில் ஒளியினை கொடுத்ததன் காரணம்
செயற்கைத்துணைக் கொண்டவரை இயற்கையின்
வெளிச்சம் காட்டத் தான்;

உலகாசை அதிகம் கொண்ட மனிதர்க்கு
பாடம் புகட்டத்தான்
மேகம் நிலவினை மறைக்கிறது
அதன் காரணம்
எதுவும் நிலையல்லவே!

கனவினில் நிஜங்களை உணர்வதனால்
நிஜங்களை கனவாக மாற்ற முடியாது
காரணம்
இது நிழல்படமில்லாத நிஜப்படம்;

உறங்கும் நேரம் மரணத்தை உணர்ந்துகொள்
அதன் பயம் உன்னிடமிருந்து குறையும்;

இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே பாடம்
உலகத்தில் மாற்றங்கள் அனைத்தும் பொதுவானது;

ஒய்வெடுக்கும் நேரத்தில் இந்த கவித்தோழன் தாலாட்ட
உறங்கிடு என் தோழியே!

- ஷேக் இப்ராஹிம்

2 comments:

  1. //இரவுகள் கற்றுக்கொடுக்கும் ஓரே பாடம்
    உலகத்தில் மாற்றங்கள் அனைத்தும் பொதுவானது;//

    யெஸ்..

    ReplyDelete
  2. /இது நிழல்படமில்லாத நிஜப்படம்//

    அழகான கவிதை

    ReplyDelete