என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, May 21, 2009

காதல் புனிதமானது!!!

நிலவினைப் பார்
தன்னிலை தனிமையானதால்
பாசத்திற்கு ஏங்கி தேய்கிறது;
சூரியனைப் பார்
தன்னிலை எல்லார்க்கும் தெரியும்படி
பூமியைச் சுட்டெரிக்கிறது;
மேகத்தைப் பார்
தன்னுடைய உறவு
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாய்
இருப்பதை பார்த்து
தன் ரத்தத்தை மழையாய் பொழிகிறது;
உன்னைத் தொட்டு விட பொறுமை உண்டு
உன்னை மறந்து விட பொறுமை இல்லையென்று
கடல் சொல்லும் கரையை பார்த்து;

இது இயற்கை கற்றுத்தரும்
காதல் இலக்கணம்
காதல் அழகு பார்த்து வரின்
அது அழகில்லை
அகத்தை பார்த்து வரின்
அதற்கு அழிவில்லையென்பது
காதலின் நியதி;
கவிதையாய் இல்லாமல்
ஒரு கனம் உங்களோடு
பேசுவதாய் வைத்து கொள்ளுங்கள்;
ஒரு நிமிடம்
உங்கள் நெஞ்சின் துடிப்பை
கை வைத்து கேட்டு பாருங்கள்;
அந்த சத்தம் உங்களுக்கு
சொல்லி காட்டுகிறதா?
உங்கள் இதயத் துடிப்பை
இயக்குவது யார் என்று;
அவரை உங்கள் நினைவினில் வைக்காமல்
நெஞ்சினில் வைத்ததால் தான்
அவர் உங்கள் உயிருடன்
துடித்து கொண்டிருக்கிறார்;
எக்கனமும் மறந்து விடாதிர்கள்
அவரை நினைக்க
இல்லையெல்
நீஙகள் மறக்கும் அக்கனமே
மாறிவிட போகிறது
அவர் இவ்வுலகை துறக்க;
காதல் மனதை சந்தோஷமாக
வைப்பது இல்லை ;
அதை தூயப் படுத்துகிறது
அதனால் தான்
காதல் புனிதமானது;

No comments:

Post a Comment