என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, May 9, 2009

விடைக் கொடு???

சில நாட்கள் கழித்து
உன்னிடம் நான் பேசிய நிமிடங்களில்
நீ பேசிய வார்த்தைகள்
என் மனதில்
வறண்ட நிலத்தில் மழையாய்,
இருண்ட வானில் நிலவாய்,
பசித்த எனக்கு உணவாய்,
வலித்த மனதிற்கு மருந்தாய்,
தேடி வந்த அதிர்ஷ்டமாய்
இருக்கக் காரணம் என்ன?
நீயும் நானும் கடந்த நாட்களில்
நம் நினைவோடு வாழ்ந்து வந்தோம்
இனி நிஜத்தொடு வாழ
பதிலை உன்னிடம் வைத்துக்கொண்டு
கேள்வி என்னிடம் கேட்பது ஏன்?
என்னுயிரே!
உன் மனதிலிருந்து பதிலைச்சொல்
நான் இன்னுமா உன் மனதில்
நுழையாமல் இருக்கிறேன்?
உன்னுடையப் பதிலை
நீ சொல்ல எடுக்கும் கணங்கள்
என் மனதில் ரணங்கள் உருவாகின்றன;
எதிர்பார்க்கிறேன் உன்னுடைய முடிவை
தேர்வெழுதிய மாணவனைப் போல்
விடைக் கொடு?
இல்லை
என் மனதிற்கு விடுதலைக் கொடு!

1 comment: