என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, May 9, 2009

எதைத் தேடுகிறோம்???

பிறக்கும் நேரத்தில்
மெதுவாக விழித்திறந்து
பார்க்கும் போது
அழகான உலகைத் தேடுகிறோம்;

அன்பும் அரவணைப்பும்
அதிகமாய் கொடுக்கும் தாயையும்
நிற்கும்வரை விழாமலிருந்துவிட
தவறாமல் தோள் கொடுக்கும்
தந்தையையும் தேடுகிறோம்;

சிறந்த வழியைக் காட்டிவிட
ஒரு ஆசிரியரையும்
வாழக்கைப் பாதையில்
சரியாக பயணிக்க
நல்ல கல்வியையும் தேடுகிறோம்;

இன்பதுன்பத்தில் பங்கிடவும்
நடக்கும் தூரம் வரை காலாக இருக்கவும்
நம் மனமறிந்த நல்ல உள்ளத்திடம்
உயரிய தோழமையைத் தேடுகிறோம்;

மீசை முளைத்த உடனேயே
அழகான பெண்ணின் பார்வை பட்டு விடவும்
அவளைக் கவர்வதற்காண
திறமையையும் தேடுகிறோம்;

உலகை விரிவாய் தெரிந்துகொள்ள
நல்ல கல்லூரியையும்
அதன்பின்
சிறகு முளைத்தப் பறவையாய்
தனியாய் பறந்துவிட
நல்ல வேலையையும் தேடுகிறோம்;

ஒன்றிரண்டு காதல் முறிந்ததாலும்
தனிமை அதிகம் வெறுத்ததாலும்
நம்மோடு கைக்கோர்த்து பயணிக்க
அழகைவிட அழகான
பெண்ணைத் தேடுகிறோம்;

அறிவு நிறைந்த ஆண் பிள்ளையும்
பண்பு நிறைந்த பெண் பிள்ளையும்
நம் பெருமையைக் காத்திட
அவர்களுக்கு
நல்ல எதிர்காலத்தைத் தேடுகிறோம்;

அன்பும் அமைதியும் ஆறுதலும்
மனம் நிறைவாகும் வரை கிடைத்திட
நல்ல முதுமையையும் தேடுகிறோம்;

நாம் மரணிக்கும் நேரத்தில்
நம்பெயர் நிலைத்து நிற்க
நம் வாழ்விற்கு
நல்லதொரு அர்த்தத்தைத் தேடுகிறோம்;

1 comment:

  1. each line pictures the exact life admirable one ....

    ReplyDelete