என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Saturday, May 9, 2009

உலகின் அடிமைத்தளமே!!

உலகின் அடிமைத்தளமே!!

அடித்தளமே!

உலகின் அடிமைத்தளமே!

படைத்தவன் வணங்கிடும் பொருளே!!

சிலருக்கு பாரமாய் பலருக்கு தூரமாய்

நிலையற்ற ஓரு உலகே!

உன்னுடைய அணைப்பினால் மகிழ்வை நீ கொடுத்திடுவாய்

உணர்வற்ற ஓர் துணையே!

தன் மதிப்பினால் பிறர் மதிப்பை ஏற்றி இறக்கி

உலகை ஆளும் இருமுகனே!!

இரண்டாக கிழிந்தாலும் குப்பையில் கிடந்தாலும்

அழகாய் தெரியும் காகிதத் தாளே!!

முதலும் இல்லை முடிவும் இல்லை

உன்னைப்பற்றி எழுதிவிட!!

No comments:

Post a Comment